திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“சாமியார்” செய்த காரியம்.. அதிர்ந்த திருவாரூர்! “துப்பாக்கியுடன்” வங்கியில் மிரட்டல் - என்னாச்சு?

Google Oneindia Tamil News

திருவாரூர்: குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டும் வகையில் புகைப்பிடித்து பேஸ்புக்கில் லைவ் செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடி பகுதி. இந்த ஊரை சேர்ந்த திருமலை சாமி என்ற சாமியார் இடி மின்னல் சங்கம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

துறவிகளைபோல் காவி வேட்டை காவி துண்டுடன் வலம் வரும் இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் இவருக்கு பதில் இவரா?? புதுசா வருபவர் இவரா..!! கலங்கும் ரசிகர்கள்பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் இவருக்கு பதில் இவரா?? புதுசா வருபவர் இவரா..!! கலங்கும் ரசிகர்கள்

துப்பாக்கியுடன் சாமியார்

துப்பாக்கியுடன் சாமியார்

அந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. "காவி உடை அணிந்து கையில் ஏதோ ஒரு பொருளை காவி துண்டால் மறைத்தபடி நடந்து செல்லும் திருமலை சாமி, மேற்கூரை இல்லாத ஒரு ஜீப்பில் ஏறுகிறார். அப்போதுதான் அவரது கையில் இருந்தது பெரிய துப்பாக்கி என்பது தெரியவந்தது. அந்த ஜீப்பை காவி துண்டு அணிந்த மற்றொரு நபர் ஓட்ட கார் வேகமாக அங்கிருந்து நகர்ந்தது.

தனியார் வங்கி

தனியார் வங்கி

சிறிது தூரம் சென்ற அந்த ஜீப் மஞ்சக்குடியில் இருக்கும் சிட்டி யூனியன் என்ற தனியார் வங்கியின் வாயிலில் நின்றது. ஜீப்பில் இருந்து இறங்கிய சாமியார் திருமலை சாமி வேகமாக வங்கிக்குள் நுழைந்தார். அங்கு வாயிற் காவலராக நின்றுகொண்டிருந்த ஒரு முதியவர், சாமியாரை தடுத்து நிறுத்தாமல் வங்கிக் கதவை திறந்தார்.

மிரட்டல்

மிரட்டல்

வங்கி உள்ளே சென்ற சாமியார், அங்கிருந்த வங்கி ஊழியர்களை நீண்ட நேரமாக மிரட்டி வாக்கு வாதம் செய்து துப்பாக்கியுடன் அங்கும் இங்குமாக நடந்தார். இதனை தொடர்ந்து வங்கியில் இருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து புகைப்பிடித்த அவரை வங்கி ஊழியர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

கைது

சாமியார் பேஸ்புக்கில் லைவ் செய்த இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்த சாமியார் திருமலையை போலீசார் கைது செய்தனர். தனக்கு வங்கிக் கடன் தர மறுத்ததால் சாமியார் துப்பாக்கியுடன் உள்ளே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

English summary
The police arrested a priest who entered the Citi Union bank with a gun near Gudavasal in Thiruvarur and went live on Facebook to threatened the bank employees. Police arrested him and the Investigation revealed that the preacher went inside with a gun after the bank refused to give him a loan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X