அமெரிக்க அதிபர் தேர்தல்:கமலா ஹாரிஸ் வெற்றி பெற திருவாரூர் அருகே பூர்வீக கிராம மக்கள் பிரார்த்தனை!
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுத்தில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் பொதுமக்கள் ஒன்று திரண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழ்நாடு பாணியில் பிளக்ஸ் பேனர் வைத்தும் அசத்தி உள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திடீரென ஜோ பைடன், போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், அமெரிக்கா அதிபர் தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி. கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான போதும் துளசேந்திரபும் உலக அளவில் கவனம் பெற்றது.

தற்போது அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் களம் காண இருப்பதும் துளசேந்திரபும் பக்கம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. துளசேந்திரபுரம் மக்களும் கமலா ஹாரீஸ், அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டும் என பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மிகவும் பழமையான தர்ம சாஸ்தா கோவிலில் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தினர்.

மேலும் கமலா ஹாரீஸ், அமெரிக்காவின் அதிபரானால் இந்தியவுடனான நட்புறவு மேம்படும்; இருநாடுகளிடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். இது இருநாடுகளுக்கும் நன்மை தரக் கூடியதாக இருக்கும். இந்தியாவுக்கும் பெரும் பலம் தரக் கூடியதாக இருக்கும். ஆகையால் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்கின்றனர் துளசேந்திரபுரம் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications