ஜாபர் சாதிக் பெயரில் போன இ-மெயில்.. திருப்பதியில் 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு
திருப்பதி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புப்படுத்தி திருப்பதியில் உள்ள பிரபலமான 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலத்தில் புகழ்பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் திருப்பதி கோவில் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு என்பது இருக்கும்.

இந்நிலையில் தான் நேற்று திருப்பதியில் உள்ள 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திருப்பதியில் உள்ள 3 ஹோட்டல்கள் மற்றும் திருச்சனூரில் உள்ள ஒரு ஹோட்டல் என்று மொத்தம் 4 ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையில் வந்த இந்த இ-மெயிலில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜாபர் சாதிக் கைது நடவடிக்கையை தொடர்புப்படுத்தி தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களுக்கும் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஹோட்டல்களில் தங்கியிருந்த பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்ட பிறகு அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ஹோட்டல்களில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. ஜாபர் சாதிக் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இ-மெயில் குறித்த பிற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
மேலும் ஜாபர் சாதிக் பெயரில் இப்படி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெங்களூரில் உள்ள பிரபலமான கல்லூரிகள், ஹோட்டல்களுக்கு ஜாபர் சாதிக் பெயரில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு இருந்தது. ஜாபர் சாதிக் யார் என்றால் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஆவார். சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் தயாரிப்பாளராகவும், உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார். டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் அவரது குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரியவந்தது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் பெயரில் திருப்பதியில் 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications