HMPV வைரஸ் முன்னெச்சரிக்கை.. திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்க வாசல் தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

hmpv virus tirupati

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வர். வரும் ஜனவரி 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அனைத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

திருப்பதியில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சொர்க்க வாசல் விழா நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்காமல் இருக்கும் வகையில் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசிப்பதற்கு கவுன்ட்டர்களில் டோக்கன்களை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹெச்எம்பிவி (HMPV) வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை திருமலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். சொர்க்கவாசல் திறந்திருக்கும் இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.

டோக்கன்களை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கெட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலையில் திருமலையில் தங்க தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த நாளான ஜனவரி 11 ஆம் தேதி காலை சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+