பக்தர்களுக்கு ஓர் அறிவிப்பு... திருப்பதியில் 27-ம் தேதி நான்கரை மணி நேரம் தரிசனம் நிறுத்தம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், வருகிற 27 ம் தேதி நான்கரை மணி நேரம் சுவாமி தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 4 மணி நேரமும், பாத யாத்திரையாக சென்று திவ்ய தரிசனம் செய்ய ஆறு மணி நேரமும் ஆவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால், பெரும்பாலான பக்தர்கள் பூங்காக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. கூட்டநெரிசலை தவிரக்க, திருமலை முழுவதும் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யுமாறு பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு கூறுகையில்: திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கியுள்ளது.
வருகிறது 27ம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மேலும், கோடைகால விடுமுறையை கருத்தில்கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் விஐபி தரிசனம் வழங்கப்படும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications