கலங்கடித்த கணவன்-மனைவி.. "மட்டன் பிரியாணி"யும், பாலியல் அட்டூழியமும்.. கொடுமை
திருப்பதி: திருப்பதியில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
திருப்பதி நகரில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பல்லைகயில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சட்டம் பயின்று வருகிறார்கள்.

இந்த பல்கலையில் பி.எல். இறுதியாண்டு படித்து வருகிறார் பிரணவ் கிருஷ்ணா என்ற இளம்பெண்.. இவருடன் சட்டக்கல்லூரியில், கர்னூலை சேர்ந்த பெண் ஒருவர் படித்து வந்தார்.. அவருடனான நட்பு இன்று வரை பிரணவ் கிருஷ்ணாவுக்கு நீடித்து வருகிறது.
அழைப்பு: இதனால், சட்டக்கல்லூரியில் தன்னுடன் படித்த கர்னூல் தோழியை, தன்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வரும்படி அழைப்பு விடுப்பாராம்.. இதனால் கர்னூல் தோழியும், பிரணவ் கிருஷ்ணாவை நேரில் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்து செல்வாராம்.
இப்படி தன்னுடைய வீட்டுக்கு வரும்போதெல்லாம், பிரணவ் கிருஷ்ணா தன்னுடைய தோழிக்கு தடபுடல் விருந்து வைப்பாராம்.. குறிப்பாக, அந்த பெண்ணுக்காக ஸ்பெஷல் பிரியாணி செய்வாராம்.. அந்த பிரியாணியில் கஞ்சாவை கலந்து தரும் பழக்கத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
கஞ்சா பிரியாணி: கஞ்சா பிரியாணியை சாப்பிட்டுவிட்டு, போதையில் விழும்போது, பிரணவ் கிருஷ்ணாவின் கணவர் கிஷோர் ரெட்டி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்வாராம்.. கணவர் தோழியை பலாத்காரம் செய்வதை பிரணவ் கிருஷ்ணா வீடியோ எடுத்து வைத்து கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது.
ஒருகட்டத்தில் இந்த வீடியோ, போட்டோக்களை எல்லாம், இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்த பிரணவ் கிருஷ்ணா தம்பதியினர், இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டார்களாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்..
டார்ச்சர்: ஒருகட்டத்தில் தம்பதி செய்யும் டார்ச்சரை தாங்கி கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி போலீஸில் நேற்று புகார் தந்துவிட்டார்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணையையும் மேற்கொண்டனர்.
அப்போதுதான், இதுபோலவே இளம்பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, கஞ்சா பிரியாணியை சுடச்சுட பரிமாறி, அவர்களை சீரழித்தது தெரிவந்துள்ளது.. வேறு ஒரு பெண்ணிடம் இப்படித்தான் மிரட்டி 5 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்திருக்கிறார்களாம் இந்த தம்பதி..
அறிவிப்பு: எனவே இவர்கள் வலையில் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள், போலீசில் புகார் அளித்தால், தம்பதிக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.. இப்போதைக்கு கணவன், மனைவி 2 பேருமே எம்.ஆர்.பள்ளி போலீசார் ஜெயிலில் ஜோடியாக அடைபட்டுள்ளனர்.. தம்பதியினர் கைது மற்றும் போலீசாரின் இந்த அறிவிப்பானது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications