ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. திருப்பதி செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷல் பஸ் ரெடி
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். வழக்கமாக புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதிக்கு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ள தகவல்:- இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications