Tirupati: திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிடப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. திருப்பதிக்கு நினைத்த போதெல்லாம் பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுசு பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம், வெளிநாட்டு கரன்ஸிகள் என ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியதாவது: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி., எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் கோவில்கள் கட்டப்படவுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ. 37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ. 3 கோடி மதிப்பில் ஒண்டிமிட்டாவில் புனித வனம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் டிசம்பர் 10 முதல் ஜனவரி 8 ஆம் வரையிலான 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலமாக 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக டோக்கன் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து முசிவு செய்யும் வகையில் உறுப்பினர்கள், நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழுவினர் வழங்கும் அறிக்கையை பொருத்து வரும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications