திருப்பதி கோயிலில் சிலுவை.. ஸ்டிக்கருடன் என்ட்ரி தந்த கார்.. உறைந்து போன பக்தர்கள்.. என்ன நடந்தது?
சிலுவை ஸ்டிக்கருடன் கார் ஒன்று திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தது
திருப்பதி: திருப்பதி கோயிலில், சிலுவை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்திருந்த ஒரு காரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. என்ன நடந்தது?
திருப்பதி கோயிலில் சில சமயங்களில் சர்ச்சைகள், அல்லது பரபரப்பு தகவல்கள் வெடிப்பது வழக்கம்.. ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடப்பது வழக்கம்...
இதுபோன்ற உற்சவங்களின்போது, கோயில் கோபுரங்களை சுற்றி லைட்டுகள் வைத்து அலங்கரிப்பார்கள்.. அதுபோன்று அலங்கரிக்கப்படும் லைட்டுகளில் அனுமன், கருடன், பூரண கும்ப கலசம் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிப்பார்கள்..
அப்படித்தான், 2 வருடங்களுக்கு முன்பும் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.. பூரண கும்பம் போலவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.. ஆனால், அந்த அலங்காரம் பார்ப்பதற்கு, சிலுவை போல இருப்பதாக சிலர் சொல்லி உள்ளனர்.

கும்ப கலசம்
"தால பத்ரா நிதி" என்ற நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும், பூரண கும்ப கலசம் என்று கூறி, சிலுவையை மின் அலங்காரம் செய்துள்ளதாக பதிவிட்டு, அந்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தனர்.. இந்த பதிவுதான் படுவைரலாகி, கடைசியில் சர்ச்சையாகவும் மாறியது.. தவறாக சித்தரிக்கப்பட்ட இந்த போட்டோவுடன் கூடிய பதிவு, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், புனிதமான கோவிலில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் பக்தர்களிடையே வீண் புரளியை கிளப்பி வருவதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் ஸ்டேஷனில் புகார் தந்தனர்..

சிலுவை
அந்த புகாரின் பேரில் போலீசாரும் பூரண கும்ப கலசத்தை சிலுவையாக இருப்பதாக கூறி, தாலா பத்ரா நிதி பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர்... இதுபோல் சர்ச்சைகள் வந்ததால், அப்போதுமுதல், தேவஸ்தான நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் அனைத்திலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.. எந்தவிதமான மோதல்கள், சலசலப்புகள் வந்துவிடாதவாறு, விழிப்புடனும் செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில், இன்னொரு சலசலப்பு நேற்று எழுந்தது..

தேவஸ்தானம்
இந்த கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வருவார்கள்.. அப்படி தரிசனத்திற்கு வரும் வாகனங்களில், மாற்று மதத்தினர் சின்னம் பொருத்திய வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை... இதற்காக அலிபிரி செக்போஸ்ட்டில். வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்தபிறகுதான், திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது... இந்த நிலையில் நேற்று தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று அலிபிரி செக்போஸ்ட்டுக்கு வந்துள்ளது..

ஸ்டிக்கர்
அந்த காரில் சிலுவை ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.. ஆனால், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த ஸ்டிக்கரை கவனிக்கவில்லை.. காரை முழுமையாக சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுமதித்தனர். அந்த கார் திருமலையில் உள்ள எஸ்எம்சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது... திருமலையில் சிலுவையுடன் கார் நிற்பதை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் பதறிவிட்டனர்.

சிலுவை
அந்த கார் ஓனரை யார் என்பதை தேடிப்பிடித்து, அவரை நேரில் அழைத்து, காரில் ஒட்டப்பட்டு இருந்த சிலுவை ஸ்டிக்கரை உடனடியாக அகற்றினர்... மேலும் மாற்று மதத்தினரின் சின்னங்களை ஒட்டிய வாகனங்களுக்கு திருமலையில் அனுமதி இல்லை என்றும், இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்... அதேபோல, அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி திருமலைக்கு வந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications