திருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்ப
திருப்பதி: திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் உலக பிரசித்த பெற்றது. உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாட்டில் பொது முடக்கம் முதன் முறையாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும், சாமிக்கு பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நாட்டில் சிறிய தளர்வுகளுடன் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 8ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதல் 2 நாட்கள் உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர், ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயில்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

ஊழியர்களுக்கு கொரோனா
இதைத் தொடர்ந்து 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

அர்ச்சகர் உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சீனிவாச மூர்த்தி (75). இவருக்கு மருத்துவமனியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர் உயிரிழந்து இருக்கிறார். ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நிலை சீரான ஜீயர்
மேலும், கோயிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு (வயது 67) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொற்று
கோயிலில் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டு இருப்பதால், பக்தர்கள் கோயில் தரிசனத்துக்கு வரலாமா? கூடாதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications