Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

VIP Darshan: திருப்பதியில் விஐபிகளுக்கான டிக்கெட்டுகள் குறைப்பு! தேவஸ்தானம் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை ஸ்ரீவாரி கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் வேதாசிர்வசனம் டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டைக் குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முக்கிய முடிவெடுத்துள்ளது.

சமீபகாலமாக பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த இந்த டிக்கெட்டுகள் இனி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati

தேவஸ்தான நிர்வாக அதிகாரி அலுவலகத்தில், விஐபி பிரேக் தரிசனம் பெறும் பிரமுகர்களுக்கு தரிசனத்துடன் வேதாசிர்வசனம் டிக்கெட்டுகளும் ஒதுக்கப்படும். தேவஸ்தானத்தின் விருப்பக் கோட்டாவின் கீழ் வழங்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் பெறுபவர்கள், ஸ்ரீவாரி தரிசனத்திற்குப் பின் ரங்கநாயகுல மண்டபத்தில் வேத பண்டிதர்களால் வேதாசிர்வசனம் பெறுவர். உடன், சேஷவஸ்திரம் மற்றும் சுவாமி பிரசாதங்களும் வழங்கப்படும்.

பரிந்துரைகளின் பேரிலான டிக்கெட்டுகள் அதிகரித்ததால் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு, மற்ற பக்தர்களுக்கு இடையூறாக அமைந்தது. எனவே, நேரடியாக வரும் பிரமுகர்களுக்கு மட்டுமே வேதாசிர்வசனம் டிக்கெட்டுகளை வழங்கவும், பரிந்துரைகளை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது. மேலும், உயர்தர சேஷவஸ்திரங்கள் வழங்க டெண்டர் செயல்முறைகள் முடிவடைந்து விரைவில் புதிய வஸ்திரங்கள் வழங்கப்படும்.

அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டாவுக்கு அருகிலுள்ள தரிகொண்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரையிலும், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 5 வரையிலும் நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் ஆய்வு செய்தார்.

ஏப்ரல் 1 அன்று நடைபெறவுள்ள ஸ்ரீ சீதாராமர் திருக்கல்யாண ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு வீரபிரம்மம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போது நடக்கும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் விரிவான மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில், கோதண்டராம சுவாமி கோயில் முன் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சமையலறை, மூலப்பொருட்கள் சேமிப்பு கொட்டகை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

பக்தர்கள் அன்னதானம் பெறுவதற்கு மேசைகள், நாற்காலிகள் அமைக்கவும், கோயிலிலும் யாகசாலையிலும் பழுதுபார்க்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

தேவஸ்தானத்தின் பிற கோயில்களைப் போலவே, ஒண்டிமிட்டா கோயிலிலும் ஸ்ரீவாரி சேவகர்களைப் பயன்படுத்த வேண்டும் என ஜேஇஓ வலியுறுத்தினார். கோயில் வளாகத்திற்கு அருகிலுள்ள புகைப்படக் கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும் மேடை ஆகியவற்றையும், திருக்கல்யாண மேடையில் நடக்கும் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பக்தர்கள் தலாம்பரங்கள், அன்னப் பிரசாதங்கள் பெறும் 17 சேவை மையங்கள், நுழைவு, வெளியேறும் வாயில்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். தங்குமிட வளாகத்தில் உள்ள ஜல பிரசாத வசதியைச் செயல்படுத்துமாறும், கல்யாண மேடையைச் சுற்றிலும் பசுமையை மேம்படுத்துமாறும் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோயில் முதல் கல்யாண மேடை வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடவும், விஐபிகள் தங்கத் தேவையான ஏற்பாடுகளை திட்டமிட்டு முடிக்கவும் கூறினார்.

பக்தர்களுக்கு வசதியான வரிசைகள், தங்குமிடங்கள், வழிகாட்டிப் பலகைகள், குடிநீர் வசதி போன்ற அனைத்து கட்டுமானப் பணிகளையும் உரிய நேரத்தில் முடிக்குமாறு இணை நிர்வாக அதிகாரி வலியுறுத்தினார். தேர் செல்லும் தெருக்களிலும், குறிப்பாக மாட வீதிகளிலும் பழுதுபார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். கட்அவுட்கள், மின்விளக்கு, மலர் அலங்காரங்கள் மூலம் பக்தர்களைக் கவரவும் அறிவுறுத்தினார்.

பிரம்மோற்சவங்கள் வெற்றிகரமாக நடைபெற அனைத்துத் துறையினரையும் பணிமாற்றம் செய்ய வேண்டும். அவசர சிகிச்சை மையங்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அறிவிப்பு முறை மூலம் தொடர்ந்து 'ஸ்ரீராம நாமம்' ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் ஜேஇஓ கூறினார்.

பிரம்மோற்சவங்களுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, விளம்பர வாகனங்கள் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர பிரச்சாரம், துண்டுப் பிரசுர விநியோகம் செய்யப்பட வேண்டும். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்குவதில் தடையின்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பக்தர்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க ஏராளமான மோர், குடிநீர் விநியோக மையங்களை தயார் செய்யுமாறு ஜேஇஓ அறிவுறுத்தினார். தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துப்பிட ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டும். பிரம்மோற்சவ வாகன சேவைகளை பக்தர்கள் காண எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+