இரவில் வரும்போது துரத்தி துரத்தி குரைத்த நாய்கள்.. விஷம் வைத்து தீர்த்துக்கட்டிய மீன்வியாபாரி!
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் தன்னை பார்த்து குரைத்த 15 தெரு நாய்களை மீன்வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்களை கொல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் மாடியில் இருந்து நாயை தூக்கிப்போட்டு கொன்றனர்.
இந்த வீடியோ வெளியானதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் ஒரு நபர் நாயின் கால்களை கட்டிப்போட்டு சாக்கடையில் வீசி கொன்றார்.

திருப்பூரில் அதிர்ச்சி
இந்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடினர். இந்நிலையில் தன்னை பார்த்து குரைத்த நாய்களை மீன் வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீன்வியாபாரம்
திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன் பிடித்து கடைகளுக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

குரைத்த நாய்கள்
இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன்பிடித்துவிட்டு தெருவில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது வீடு மற்றும் தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வருவதால் கோபால் ஆத்திரமடைந்தார்.

விஷம் வைத்து கொலை
இதனால் தன்னை பார்த்து குறைக்கும் நாய்களை கொல்ல முடிவு செய்தார் கோபால். மீன் பிடிக்க உபயோகப்படுத்தப்படும் மருந்தை உணவில் கலந்து தெருக்களில் உள்ள நாய்களுக்கு வைத்துள்ளார். இதில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 15 நாய்கள் கொல்லப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் கொங்கணகிரி இரண்டாம் விதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நாய்கள் இறந்ததால் மீன் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். குரைத்த நாய்களை மீன் வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications