வழக்கின் போக்கையே மாற்றும்.. கவின் குடும்பத்திற்கே ஆப்பு.. ரிதன்யா கேசில் கவனம் பெறும் ரிப்போர்ட்
சென்னை: ரிதன்யா தற்கொலை வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின், கவினின் அப்பா - அம்மாவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. அடுத்து இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்.
விரைவில் வெளியிடப்படவுள்ள ரிதன்யா வழக்கு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த அறிக்கையை அரசு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடும். இவ்வறிக்கையில், ரிதன்யா அனுபவித்த உடல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த விவரங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

ரிதன்யா வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கை
பிரேத பரிசோதனை அறிக்கை கவின் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக மாறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கவினின் குடும்பத்தினருக்கு ஜாமீன் மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிதன்யாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கை வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல உண்மைகள் வெளிவரக்கூடும்.
கவின் மற்றும் அவரது பெற்றோர் அளித்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய ஆதாரமாக கருதப்பட உள்ளது. இந்த அறிக்கை, வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு முக்கியமான தகவல்களை அளிக்கக்கூடும். இதன் மூலம், வழக்கில் ஒரு தெளிவு கிடைக்கும்.முடிவாக, ரிதன்யா தற்கொலை வழக்கில் கவின் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜாமீன் மறுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த அறிக்கை வழக்கின் போக்கை மாற்றக்கூடும்.
ரிதன்யா தற்கொலைக்கு முன் தனது தம்பியிடம் மட்டும் கவின் பற்றி பல புகார்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் இந்த விவகாரத்தில் வரப்போகும் ரிப்போர்ட் ஒன்று வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிதன்யா வழக்கில்.. ரிதன்யாவிற்கு பாலியல் ரீதியாக அவரின் கணவர் கவின் கொடுமைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக கவின் அப்பாவிடம் இதை பற்றி மறைமுகமாக சொல்லியும் அவர்கள் வீட்டில் இதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரிதன்யா எதிர்கொண்ட கொடுமைகள்
அதாவது கவின் தனது மனைவியிடம் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். அதோடு நிற்காமல் சில இழிவான செயல்களை செய்யவும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதை பற்றி ரிதன்யா தனது மாமியார், மாமனாரிடம் மறைமுகமாக சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் தனது தம்பியிடம் இதை பற்றி புகார் சொல்லி உள்ளார். உங்க மாமா தவறானவர் என்பது போல தம்பியிடம் மட்டும் கொஞ்சம் வெளிப்படையாக ரிதன்யா புகார்களை கூறி உள்ளார். ஆனால் அவர் சிறிய பையன் என்பதால் முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதில் ரிதன்யா கணவர் கவின் மிக மோசமான மனநிலை கொண்டவராக இருப்பார் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிதன்யா பிரேத பரிசோதனை
ரிதன்யா பாலியல் கொடுமை புகார்களையும் வைத்து இருக்கிறார் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அதில் பல ரகசியங்கள் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. ரிதன்யா தற்கொலை முடிவை எடுக்கும் முன் பேசிய ஆடியோவை கவனம் பெற்றுள்ளது. தற்கொலை முடிவை எடுக்கும் சில வினாடிகளுக்கு முன் அவர் பேசி இருக்கிறார். அதை அப்பாவிற்கு அனுப்பி இருக்கிறார். தற்கொலைக்கு முன் பேசிய அந்தஆதாரம் மிக முக்கியமானது. மிக முக்கியமான மின்னணு ஆதாரம் அது. அதில் கணவர், மாமனார், மாமியார் என்று 3 பேர் மீதும் ரிதன்யா புகார் அளித்துள்ளார் .












Click it and Unblock the Notifications