திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்.. அதிகரிக்கும் உள்நாட்டு ஆர்டர்கள்.. ஐரோப்பா ஆர்டர்களும் அதிகரிப்பு
திருப்பூர்: இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகரித்திருக்கிறது. குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகம் வந்த வண்ணம் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் இதுதவிர ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது தொழிலாளர் தேவை திருப்பூரில் அதிகமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்
இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம் ரூ.35 ஆயிரம் கோடிக்கும், வெளிநாட்டு ஆடை வர்த்தகம் ரூ.44 ஆயிரம் கோடிக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் 50சதவீத வரியால் கடந்த ஆக்ஸ்ட் மாத இறுதியில் பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், உள்நாட்டு ஆர்டர்கள் இந்த தீபாவளிக்க சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில் முன்பு வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்குள் அதிகம் இறக்குமதி ஆனது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்குள் விலை குறைவாக வங்கதேச ஆடைகள் அதிக அளவில் விற்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது பற்றி குஜராத் மற்றும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன்பயனாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தரைவழி ஆடை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது பெருமளவு இறக்குமதி வங்கதேசத்தில் இருந்து குறைந்துவிட்டது.
இதனால் இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகரிக்க தொடங்கிவிட்டது. குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகமாகவிட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஆர்டர்களை நிறைவேற்ற இன்னும் தொழிலாளர் அதிக அளவில் தேவை என்கிறார்கள். தீபாவளி பண்டிகை மற்றம் பீகார் தேர்தல் உள்ளிட்டவைகளுக்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 சதவீதம் அளவிற்கு திருப்பூருக்கு திரும்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு விரைந்து திரும்ப வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதவிர ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான ஆர்டர்களும் வெளிநாடுகளில் இருந்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. எனினு ம் அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க வரி குறைப்பு தொடர்பான நல்ல தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நிதி ஒதுக்கீடு, வட்டி விகிதம் குறைப்பு, டியூட்டி டிராபேக் சதவீதம் அதிகரிப்பு போன்றவற்றை திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்..
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications