கொடூரம்! 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்.. திருப்பூர் அருகே பயங்கரம்!
திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடூரச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது பள்ளிச் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்ப்ட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்தனர்.
தேர் திருவிழா முடிந்த அன்று மாலையில் இசை கச்சேரி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் பார்வையாளர்களாகச் சென்ற நிலையில், தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து, அவரது தாய் சிறுமியைத் தேடிய நிலையில், அந்தச் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படட்து தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் தொலைந்த சிறுமியை காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications