Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தோழிகளுடன் தகராறு! விபரீத முடிவு எடுத்த கீர்த்தனா! உயிர்போன சோகம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாட்ஸ் அப் 'ஸ்டேட்டஸ்' வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (17).

கீர்த்தனா உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுப்பு என்பதால் அவர் டைப்ரைட்டிங் கற்று வந்தார்.

உறவினரிடம் செல்போனில் பேச்சு

உறவினரிடம் செல்போனில் பேச்சு

இவரது வீட்டு அருகே கிணறு ஒன்று உள்ளது. 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 50 அடிஉயரத்திற்கு தண்ணீர் உள்ளது. நேற்று கிணற்றின் அருகே நின்ற கீர்த்தனா தனது உறவினர் மனோஜ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கண்கலங்கிய நிலையிலும், சோகமாகவும் பேசினார்.

தற்கொலை செய்வதாக...

தற்கொலை செய்வதாக...

அப்போது, ‛‛நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன்'' என கூறினார். அதற்கு அவர் ‛‛வேண்டாம். தற்கொலை செய்யாதே'' என கூறியபோதே செல்போனை தரையில் வீசி எறிந்துவிட்டு கிணற்றில் குதித்து விட்டார். செல்போன் ஆப் ஆகாததால் கீர்த்தனா கிணற்றில் விழுத்த சத்தம் மனோஜிக்கு கேட்டது.

கிணற்றில் குதித்து தற்கொலை

கிணற்றில் குதித்து தற்கொலை

இதையடுத்து அவர் சோழமாதேவியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டு கீர்த்தனாவை காப்பாற்ற கூறினார். பிரபாகரன் அங்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும், செல்போன் மட்டுமே கிடந்தது. கிணற்றில் குதித்த கீர்த்தனா தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

 உடல் மீட்பு

உடல் மீட்பு

இதுபற்றி உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி கீர்த்தனாவின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கீர்த்தனாவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

வாட்ஸ்அப் ‛ஸ்டேட்டஸ்’ பிரச்சனை

வாட்ஸ்அப் ‛ஸ்டேட்டஸ்’ பிரச்சனை

விசாரணையில் செல்போனில் வாட்ஸ் அப் 'ஸ்டேட்டஸ்' வைப்பது தொடர்பாக தனது தோழிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+