பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தண்ணீர் பந்தல்.. அசத்தும் உடுமலை அஇஅதிமுக!
திருப்பூர்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தாகம் தீர்க்க நடமாடும் நீர்மோர் பந்தல் திட்டத்தை முதல்வரின் பிரச்சாரத்தில் உடுமலை அதிமுகவினர் நூதனமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என கூறினார்.

திமுக நாட்டுக்கு உழைக்காமல் சொந்த குடும்பத்திற்கு உழைப்பதாக குற்றம்சாட்டிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொதுவாக இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். இது அவர்களின் தாகத்தை தணிக்க போதுமானதாக இல்லாமலும் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் சாலை எங்கும் சிதறி சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படும்.

இதனை தவிர்க்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நடமாடும் நீர் மோர் பந்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அலுப்பு தெரியாமல் இருக்க பொதுமக்கள் ஆர்வத்தோடு முந்தியடித்துக்கொண்டு நீர் மோர் வாங்கி பருகி சென்றனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து இயற்கை முறையில் தாகம் தணிக்கும் நடமாடும் நீர் மோர் பந்தலை நூதன முறையில் உடுமலை அதிமுகவினர் ஏற்பாடு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications