பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தண்ணீர் பந்தல்.. அசத்தும் உடுமலை அஇஅதிமுக!
திருப்பூர்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தாகம் தீர்க்க நடமாடும் நீர்மோர் பந்தல் திட்டத்தை முதல்வரின் பிரச்சாரத்தில் உடுமலை அதிமுகவினர் நூதனமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என கூறினார்.

திமுக நாட்டுக்கு உழைக்காமல் சொந்த குடும்பத்திற்கு உழைப்பதாக குற்றம்சாட்டிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொதுவாக இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். இது அவர்களின் தாகத்தை தணிக்க போதுமானதாக இல்லாமலும் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் சாலை எங்கும் சிதறி சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படும்.

இதனை தவிர்க்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நடமாடும் நீர் மோர் பந்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அலுப்பு தெரியாமல் இருக்க பொதுமக்கள் ஆர்வத்தோடு முந்தியடித்துக்கொண்டு நீர் மோர் வாங்கி பருகி சென்றனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து இயற்கை முறையில் தாகம் தணிக்கும் நடமாடும் நீர் மோர் பந்தலை நூதன முறையில் உடுமலை அதிமுகவினர் ஏற்பாடு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications