ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து.. நலத்திட்டங்களை கூடுதலாக செய்கிறோம்... ஓபிஎஸ் பேச்சு
திருப்பூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு பயந்து மக்கள் நலத்திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கூடுதல் நலத்திட்டங்கள்
நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்கிறார்களா என்று மேலே இருந்து கொண்டு, ஜெயலலிதா பார்ப்பார் என்ற பயம் காரணமாக, கூடுதலாகவே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

ஓபிஎஸ் உறுதி
மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஓ. பன்னீர்செல்வம், 15 லட்சம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்படுள்ளது என்றும் அவை அனைத்தும் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.

முதன்மை மாநிலம்
தமிழகம் கடந்த 4 வருடங்களாக வேளாண்மையில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு நாயகன்
முன்னதாக, தான் தமிழக முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடியிடம் பேசி, ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்காக தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என கூற வேண்டாம் என்றும் அப்போது கேட்டுக் கொண்டார். மேலும், தனக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் கலகத்தை ஏற்படுத்த நினைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பில்டிங், பேஸ்மென்ட்வீக் எனவும் விமர்சித்தார்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?











Click it and Unblock the Notifications