அந்த "மாமா" தான் காரணம்.. வெடித்து கதறிய 15 வயது பிஞ்சு.. அதிர்ந்து போன திருப்பூர்.. என்னாச்சு?
திருப்பூரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைதானார்
திருப்பூர்: மீண்டும் ஒரு போக்சோ கொடுமை திருப்பூரில் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட காம மிருகத்தை போலீசார் பிடித்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்து வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்..
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இந்த குற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.

போக்சோ
இந்த போக்சோ சட்டத்தின்கீழ் கைதானால், கடும் தண்டனை கிடைக்கும் என்ற போதிலும், பாலியல் சம்பவங்கள் இன்னும் குறையாமலேயே தொடர்கிறது. போக்சோவில் கைதானாலும், குற்றவாளிகள் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.. அப்படியானால் போக்சோவைவிட தீவிரமான, கடுமையான சட்டங்களே அதிகம் தேவை என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.. பாலியல் குற்றங்களுக்கு தரப்படும் தண்டனையானது, இனி அத்தகைய குற்றங்களை செய்ய யாருமே துணியகூடாது என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

திருப்பூர்
இப்போதும் ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.. இவரையும் போலீசார் போக்சோவில்தான் கைது செய்துள்ளனர். ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி பூசாரி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நாகமணி.. 50 வயதாகிறது.. திருமணமாகி 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இதில், ஒருவருக்கு திருமணமாகிவிட்டது.. 2வது மகளுக்கு 15 வயதாகிறது.. இவர் சமீபகாலமாகவே, அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்துள்ளார். இதை சிறுமியின் அம்மா நாகமணியும், அக்காவும் பார்த்துவிட்டு விசாரித்துள்ளனர்.

போனில் யாரு
அப்போதுதான் போனில் பேசியது, அக்கா கணவர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.. அவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பாஸ்கர் சிறுமியை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இந்த விஷயத்தை வெளியே சொன்னால், அக்காவை வாழாவெட்டியாக வீட்டிற்கு அனுப்பிவிடுவதாக பாஸ்கர் மிரட்டினாராம்.. அந்த மிரட்டலுக்கு பயந்து, மாமா சொல்வது போலவே நடந்து கொண்டுள்ளார்.. இந்த பயத்தை பலமுறை, பாஸ்கர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

கைது
இதையெல்லாம் சொல்லி சிறுமி அழுததையடுத்து, நாகமணியும், அக்காவும் அதிர்ந்தனர்.. உடனடியாக நாகமணி காங்கயம் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்போரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications