கல்வெட்டில் 'மிஸ்' ஆன அமைச்சர் பெயர்.. கோஷ்டி மோதலா? எழுந்த சர்ச்சை! அதிகாரிகள் மீது அதிரடி ஆக்ஷன்!
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் திறக்கப்பட்ட நிலையில், குழாய் திறப்பு குறித்து அமைக்கப்பட்ட கல்வெட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அலட்சியமாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது சொந்த மாவட்டமான திருச்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிக்கான கல்வெட்டில் அவரது பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த குடிநீர் குழாய் திட்டம் பற்றிய கல்வெட்டில் அமைச்சர் கே.என்.நேரு பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் குழாய்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 5-வது வார்டில் கால்நடை சந்தைக்கு அருகே மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைத்தார்.

நேரு ஆதரவாளர்கள் அதிர்ச்சி
இதற்காக நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் அப்பகுதி திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே பகுதியைச் சேர்ந்த இரு அமைச்சர்களில் ஒருவரது பெயர் மட்டும் கல்வெட்டில் இடம்பெற்றதால் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

கல்வெட்டு அகற்றம்
மணப்பாறை நகரப் பகுதி, திமுகவில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ளது. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இந்த கல்வெட்டு பிரச்சனையால் இரு அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கே.என்.நேரு ஆதரவாளர்கள் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் விடுபட மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி, பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஷின் கவனக்குறைவு தான் காரணம் என்று தெரியவந்தது.

அதிரடி நடவடிக்கை
அதைத்தொடர்ந்து, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு பெயரையும் இடம்பெறச் செய்து மீண்டும் கல்வெட்டு வைக்கப்படும் எனத் தெரிகிறது.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications