போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு
திருச்சி: திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு கால்நடைகளை சிறைபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கால்நடைகள் சுற்றி திரிகின்றன. கால்நடைகளால் கண்டபடி சாலைகளில் இருப்பதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.முக்கிய நெடுஞ்சாலைகளிலேயே சில நேரங்களில் கால்நடைகள் படுத்துக் கொள்கின்றன. அவை நகர்ந்து போக மறுப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து பலரும் திருச்சி மாநகாரட்சிக்கு கால்நடைகள் குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.
அதேநேரம் பறிமுதல் நடவடிக்கைகளின் போது மாடுகளை வாகனங்களில் ஏற்றுவது பெரும் சவாலாக இருப்பதால் கால்நடைகளை சிறை பிடித்து கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட 2 சிறப்பு வாகனங்களை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது.
முன்னதாக இருந்த வாகனத்தில் கால்நடைகளை ஏற்றி செல்வது சவாலாக இருந்த காரணத்தால் ரூ.30 லட்சம் செலவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள் வாங்கி உள்ளது திருச்சி மாநகராட்சி.
இந்த சிறப்பு வாகனம் சிரமமின்றி கால்நடைகளைப் பிடிக்க உதவுவதாகவம், கால்நடைகளை கையாள்வது குறித்த விமர்சனங்களும் எழுவதில்லை என்றும், திருச்சி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கால்நடைகளை சிறைபிடிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய இந்த வாகனத்தில் ஒரே ம் ஒரே நேரத்தில் 6 மாடுகள் வரை பறிமுதல் செய்து கோணக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான காப்பகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் இந்த ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் சாலைகளில் கால்நடைகள் சுற்றி தெரியும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் மாடுகளை கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு மாடுகளை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தி உள்ளனர். அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட 5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை அபராதம் செலுத்தி மீட்க முன்வராத காரணத்தால், ரூ. 74,000 தொகைக்கு அவைகளை ஏலம் விட்டிருக்கிறது திருச்சி மாநகராட்சி. புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் திருச்சியில் அதிக மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இனிமேல் திருச்சியில் மாடுகள் சுற்றினால கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications