பாருங்க.. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் ஜெயிக்கும்- திருச்சியில் மோடி சகோதரர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி திருச்சியில் தெரிவித்தார்.

பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கத்தின், அகில இந்தியத் தலைவராக உள்ளவர், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி.

BJP will win more than 400 seats in the 2024 Lok Sabha elections: Prahlad Modi

நரேந்திர மோடிசெயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க விழா நேற்று திருச்சியில் நடந்தது. இந்த விழாவிற்கு மாநில தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி்ன்னதுரை முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பிரகலாத் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகள் மக்களை சென்றடையவிடுவதில்லை. எனவே தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடையும் வகையில் பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் 25 லட்சம் போ் இணைந்துள்ளனா். இதன் மூலம் நாடு முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கப்படும்.

நமது நாட்டில் ஏழை தாய்மார்கள் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது அடையும் சிரமங்களை கண்ட பிரதமர் மோடி இலவச எரிவாயு இணைப்புதிட்டத்தை கொண்டு வந்து ஒரு கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கி இருக்கிறார். மேலும் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. அதே போல் ஏழை மக்கள் வங்கி கணக்கு தொடங்குவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படுவதன் மூலம், வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக 400- க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக இந்த இயக்கம் தொடா்ந்து பாடுபடும் இவ்வாறு அவர் பேசினர்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பிரகலாத் மோடி கூறியது:

எத்தனையோ நல்ல பல திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. அவற்றை கொண்டு சோ்ப்பதுடன், தொண்டா்களை உற்சாகப்படுத்தவும் இந்த சந்திப்பு உதவும். இதற்காக யாரிடமும் நிதியோ, கட்டாயத் தொகையோ ஏதும் வசூலிக்கவில்லை. இந்த இயக்கம் நாடு முழுவதும் களமிறங்கி, 25 கோடி பேரை இணைக்கும் வகையில் செயலாற்றும் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பிரசார இயக்கத்தின் தேசிய அமைப்பாளா் ஜெய்கோஷ், மாநிலத் தலைவா் ராஜாராமன், மாநிலத் துணைத் தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் விஜய், மாநில ஒருங்கிணைப்பாளா் சின்னதுரை, திருச்சி மாவட்டத் தலைவா்கள் சுப்பிரமணி, ஐசக்அருள்ராஜ் மற்றும் திருச்சி மண்டல அனைத்து மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+