அண்ணாமலை திணிக்கப்பட்ட தலைவர்! முதிர்ச்சி பத்தாது! காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சாடல்!
திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும் அவர் திணிக்கப்பட்ட தலைவர் எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பேசினார்.
மேலும், ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ யாத்ரா நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி.கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகள் சிலவற்றை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல்காந்தியின் நடைபயணத்தை கண்டு பாஜக அஞ்சுவதாக கூறினார்.

பயணம் வெற்றிபெறும்
ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்ரா மிகவும் எழுச்சியுடன் இருப்பதாகவும் நிச்சயம் அந்த பயணம் வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அரசியல் கட்சித் தலைவரின் செயல்பாடுகளை வைத்து தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ராகுல் அணியும் ஆடையை வைத்து விமர்சிக்கக் கூடாது எனக் கூறினார். மேலும், ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவதாக திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திணிக்கப்பட்ட தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது என்றும் அதனால் தான் அவர் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவியை காலில் விழ வைத்து தன்னை பெரிய தலைவர் போல் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார் எனத் தெரிவித்தார். அண்ணாமலையை பொறுத்தவரை அவர் திணிக்கப்பட்ட தலைவர் என திருநாவுக்கரசர் ஒரே போடாக போட்டார்.

திருநாவுக்கரசர்
நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அரசே இனி வரும் காலங்களில் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்த வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. கேட்டுக்கொண்டார். கடந்த சில மாதங்களாக ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த திருநாவுக்கரசர் ராகுலின் தமிழக வருகைக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக தனது திருச்சி மக்களவை தொகுதிக்குள் உலா வருகிறார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications