வெட்கததை விட்டு சொல்கிறேன்.. தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு
திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசுகையில், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்-தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.
அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அண்ணன் தம்பி
அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சி மாதிரி. முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருகிறாரா என்பது நாளைதான் தெரியும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு பேசியதில் இரு விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. ஒன்று தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சி அமைந்தவுடன் பெரும்பாலான அரசு அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்தார். இந்த மாற்றம் அவ்வப்போது நடைபெறுகிறது. அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக அரசுக்கு தோதுவான அதிகாரிகளையே முதல்வர் ஸ்டாலின் நியமித்ததாக சொல்லப்பட்டது. அப்படியிருக்கும் போது கே. என். நேரு இப்படி சொல்கிறார்.

ஒற்றை தலைமை
அது போல் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை பாஜக விரும்பவில்லை என விமர்சனங்கள் உண்டு. மேலும் ஒன்றிணைந்த அதிமுக இருக்கக் கூடாது என்பதில் அக்கட்சி சதி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது கே என் நேருவும் அதே கருத்தை கூறியுள்ளார். மேலும் அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சிகள் என்று கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள்
திமுகதான் தங்களுக்கு ஒரே எதிரி என அதிமுக நிர்வாகிகளும், சசிகலாவும் சொல்லி வரும் நிலையில் கே என் நேருவோ அண்ணன் தம்பிகள் என்கிறார். அரசியல் நாகரீகம் என்பது வேறு அமைச்சர் பேசியது வேறு. இரு தரப்பினரும் ஆட்சி, அதிகாரம் என வரும் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்துக் கொண்டால் நலம் விசாரித்து கொள்கிறார்கள். சட்டசபையிலும் சில நேரங்களில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர் நேரு சொன்னது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக் குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விடிந்தாலே யார் என்ன பிரச்சினையுடன் வருவார்கள் என நினைத்து தூக்கம் வருவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் கே என் நேரு பேசியதற்கு முதல்வரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
-
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா












Click it and Unblock the Notifications