Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்கததை விட்டு சொல்கிறேன்.. தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசுகையில், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்-தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.

அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

 அண்ணன் தம்பி

அண்ணன் தம்பி

அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சி மாதிரி. முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருகிறாரா என்பது நாளைதான் தெரியும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு பேசியதில் இரு விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. ஒன்று தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

திமுக ஆட்சி அமைந்தவுடன் பெரும்பாலான அரசு அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்தார். இந்த மாற்றம் அவ்வப்போது நடைபெறுகிறது. அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக அரசுக்கு தோதுவான அதிகாரிகளையே முதல்வர் ஸ்டாலின் நியமித்ததாக சொல்லப்பட்டது. அப்படியிருக்கும் போது கே. என். நேரு இப்படி சொல்கிறார்.

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

அது போல் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை பாஜக விரும்பவில்லை என விமர்சனங்கள் உண்டு. மேலும் ஒன்றிணைந்த அதிமுக இருக்கக் கூடாது என்பதில் அக்கட்சி சதி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது கே என் நேருவும் அதே கருத்தை கூறியுள்ளார். மேலும் அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சிகள் என்று கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள்

அதிமுக நிர்வாகிகள்

திமுகதான் தங்களுக்கு ஒரே எதிரி என அதிமுக நிர்வாகிகளும், சசிகலாவும் சொல்லி வரும் நிலையில் கே என் நேருவோ அண்ணன் தம்பிகள் என்கிறார். அரசியல் நாகரீகம் என்பது வேறு அமைச்சர் பேசியது வேறு. இரு தரப்பினரும் ஆட்சி, அதிகாரம் என வரும் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்துக் கொண்டால் நலம் விசாரித்து கொள்கிறார்கள். சட்டசபையிலும் சில நேரங்களில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர் நேரு சொன்னது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக் குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விடிந்தாலே யார் என்ன பிரச்சினையுடன் வருவார்கள் என நினைத்து தூக்கம் வருவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் கே என் நேரு பேசியதற்கு முதல்வரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+