கழற்றி வீசப்பட்ட இந்தி எழுத்துக்கள்! கடும் எதிர்ப்புக்கு மத்தியில்.. நடந்த சம்பவம்!
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தின் வரவேற்பு வளையத்தில், தமிழில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தற்போது இந்த எழுத்துக்கள் கழற்றி வீசப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இந்தி திணிப்பு என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறி வருகிறது. ரயில் நிலையங்களிலும் இந்தி திணிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

என்ன நடந்தது?
குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை புறநகர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான, திருச்சி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வளைவில், இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தமிழ் தெரியும். ஆனால், தமிழில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால் எப்படி வாசிக்க முடியும். அப்படியான சம்பவம்தான் திருச்சியில் நடந்தது.
'கர்தவ்ய த்வார்' என்று தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த பயணிகள், அடேங்கப்பா.. இதென்ன திருச்சி ரயில் நிலையம் எழுந்து சென்று டெல்லிக்கு பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டதா என்ன? என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து விஷயம் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு சென்றது. முதலமைச்சர் உட்பட, அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வித்தியாசமான பாணியில் அறிக்கை விட்டிருந்தார்.
இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த திமுகவினர், உடனடியாக போராட்டக்களத்தில் இறங்கினர். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த நிர்வாகம், வழக்கம் போல பின்வாங்கிக்கொண்டது. தற்போது இந்த இந்தி வார்த்தைகள் கழற்றி தூக்கியெறியப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications