நாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்
திருச்சி: நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இன்னும் முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் திறந்துவிடப்படும் நீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் நிறைந்து வழிகின்றன. அங்கிருந்து சுமார் 3 லட்சம் கனஅடிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 2.50 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 18 அடியை தாண்டியது. தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. நேற்றை விட இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நாளைக்குள் மேட்டூர் அணை 100 அடி எட்டும் என தெரிகிறது. இதனால் இன்னும் சில நாளில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். இதனால் மேட்டூர் அணையை காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு திருச்சியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்தது. இதையடுத்து அங்கு 387கோடி ரூபாய் செலவில் புதிய கதவணை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை அங்கு தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் பட்சத்தில் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் முக்கொம்பில் தற்போது தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications