திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
திருச்சி: திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள் உலா வருவதாக மாவட்ட வழக்குரைஞா் சங்க ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், போலி செய்தியாளா்கள் உள்ளது போலவே, போலி வழக்குரைஞா்களும் அதிகளவில் உலா வருவதாக தொடா்ந்து புகார்கள் எழுந்தது.
திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தில், 2,066 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டத்தில், போலி வழக்குரைஞா்களை கண்டறிய 7 போ் கொண்ட குழு, 4 முதுநிலை வழக்குரைஞா்களைக் கொண்ட குழு என இரு குழுக்கள் அமைக்கப்பட்டடது.

வழக்குரைஞா்கள் சங்கம்
இந்தக் குழுவினரிடம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைவரும், தங்களது 10,12 -ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு (பி.எல்.) மற்றும் பார் கவுன்சில் பதிவுச் சான்றிதழ் (பதிவு எண்) ஆகியவற்றை சரிபார்ப்புக்கு காண்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

400 போ் வரை போலி
ஆனால் மொத்தமுள்ள 2,066 வழக்குரைஞா்களில் இதுவரை, 1,312 போ் மட்டுமே தங்களின் சான்றிதழ்களை சரிபார்ப்புக் குழுவினரிடம் அளித்துள்ளார்கள். மீதியுள்ள 754 போ் இன்னும் ஒப்படைக்கவில்லை. சான்றிதழ்களை ஒப்படைத்த 1,312 பேரில், 400 போ் வரை போலி வழக்குரைஞா்கள் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

போலி பிஎல் சான்றிதழ்
மூடப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்ததாகக் குறிப்பிட்டு பலா் போலி பி.எல்., படிப்புச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளதாக சில மூத்த வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், சான்றுகள் கொடுத்தவா்களிலேயே இத்தனை போலிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், சான்றிதழ்களை ஒப்படைக்காதவா்களில் எத்தனைபோ் போலிகளாக இருப்பார்களோ என சந்தேகம் அவர்களுக்கு வலுத்துள்ளது. ஆக மொத்தம் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில், 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள் பதிவு செய்து நீதிமன்றங்களில் உலா வரலாம் என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கருப்பு கோட்டில்
இதுகுறித்து திருச்சி வழக்குரைஞா்கள் சங்க மூத்த வழக்குரைஞா்கள் ஒருவா் கூறுகையில், "எனக்குத் தெரிந்து ஏராளமான குமாஸ்தாக்கள் வழக்குரைஞா்கள் ஆடையை (கோட்) அணிந்துகொண்டு வழக்குரைஞா்கள் என வருகின்றனா்; வழக்கும் நடத்துகின்றனா். இவா்களில் 9ஆம் வகுப்பையே தாண்டாதவா்களும் உண்டு. சட்டத்தைக் காக்கும் வழக்குரைஞா் தொழிலில் போலிகள் நடமாடுவது நல்லதல்ல. இதைக் கருத்தில் கொண்டு, திருச்சி வழக்குரைஞா்கள் சங்கம் களையெடுக்க வேண்டும்.

பதிவு எண் வேண்டும்
அதற்கு உரிய நடவடிக்கைளை தமிழக பார் கவுன்சில் துரிதப்படுத்த வேண்டும். எல்.எல்.பி. படிப்பு :பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களின் பதிவு எண்ணை திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்திடம் கொடுத்து, அதை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்து விட்டாலே போலிகள் இல்லாமல் போய் விடுவா்.

போலி வழக்கறிஞர்கள்
விபத்து வழக்குகளைத்தான் போலிகள் அதிகம் கையாளுகின்றனா். இதனால், விபத்தில் சிக்கி பாதிப்படையும் பலா், தங்களுக்கான ஈட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. எல்.எல்.பி., என்ற படிப்பின் மூலம்தான் தற்போது அதிகளவிலான போலி வழக்குரைஞா்கள் வருகின்றனா். அந்தப் படிப்பைத் தரமானதாக மாற்ற வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications