சென்னை டூ சேலம் புதிய சாலை.. மோடி அர்ப்பணித்த சேலம்-வாணியம்பாடி சாலையால்.. இவ்வளவு நன்மையா?
திருச்சி: சேலம் -வாணியம்பாடி சாலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், சென்னையில் இருந்து சேலம் செல்வோருக்கு பயண நேரம் கணிசமாக குறையும்.
வாணியம்பாடி செட்டியப்பனூரில் இருந்து சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டினம் வரை கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர், தொலைவுள்ள குறுகிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. NH 179A தேசிய நெடுஞ்சாலையான வாணியம்பாடி - சேலம் நான்குவழி சாலை விரிவாக்கத் திட்டம் ரூ. 521 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

130 கி.மீ., தொலைவுள்ள நான்கு வழிச்சாலை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் கடந்த 4 வருடங்களாக நடந்து வந்தன. இந்த சாலையைத்தான் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இந்த வாணியம்பாடி - சேலம் நான்குவழி சாலையில் பயணித்தால் சென்னையிலிருந்து சேலத்தை 5 மணி நேரத்தில் அடைய முடியும். இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கிமீ தூரத்திற்கு இரண்டு வழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் முடிந்தால் நிச்சயம் சேலம் டூ வாணியம்பாடியை எளிதாக கடக்க முடியும்.
தற்போதைய நிலையில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல பெரும்பாலும ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை 347 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலை வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பகுதி மக்கள் சென்னை செல்கிறார்கள். ஏற்கனவே திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் உளுந்தூர் பேட்டையில் இணைவதால், அதன்பின்னர் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொங்கல், தீபாவளி, வார இறுதி நாட்களில் பயணிப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில் சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல இன்னொரு வழியும் உள்ளது. சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்று அதன்பின்னர் வளைந்து வாணிம்பாடி , வேலூர், காஞ்சிபுரம் வழியாக பூந்தமல்லியில் இணைந்து நேரடியாக சென்னைக்குள் நுழைய முடியும். ஆனால் இந்த சாலை சுற்றி செல்ல வேண்டியள்ளதால் பலரும் விரும்புவது இல்லை.. அதேநேரம் சேலத்தில் இருந்து அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், வாணிம்பாடி வழியாக சென்றால் 50 கிமீ தூரம் குறைவு என்றால், பயண நேரமும் கணிசமான நேரம் குறையும் .
இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கியது. கடந்த 5 வருடங்களாக பணிகள் நடந்து வந்த நிலையில் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இனி இந்த சாலை வழியாக சென்னை சென்றால் பயண நேரம் சேலம், கோவை மக்களுக்கு நிச்சயம் கணிசமான அளவில் குறையும். எவ்வளவு நேரம் குறைகிறது என்பதை பயணித்து வந்தவர்கள் சொன்னால் தான் நமக்கு தெரியும். சென்னை டூ சேலம் 5 மணி நேரத்தில் போக முடியும் என்கிறார்கள்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications