திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் இருந்து...துபாய் அபுதாபி மலேசியாவுக்கு... செப்டம்பரில் சிறப்பு விமானம்!!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இருந்து துபாய், அபுதாபி, மலேசியா போன்ற நாடுகளுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்களை மீட்டு வர, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Special flights to Malaysia, Abu Dhabi, Dubai from Trichy airport

தற்போது, நான்காம் கட்ட தளர்வுகளுடன், செப்டம்பர், 30ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, மலேசியா போன்ற நாடுகளுக்கு, சிறப்பு விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் மாதம் 2, 8, 10, 17, 18, 24 மற்றும், 26 ஆகிய தேதிகளில், மலேஷிய தலைநகர், கோலாலம்பூருக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது. அதே தேதிகளில், மறு மார்க்கத்திலும் சிறப்பு விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்!தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்!

திருச்சியிலிருந்து தோகாவிற்கு செப்டம்பர் 5, 13, 21, 29 ஆகிய தேதிகளில், காலை, 10:05 மணிக்கு புறப்படும் விமானம், மறு மார்க்கமாக மீண்டும் இரவு, 8:00 மணிக்கு திருச்சியை வந்தடையும். வரும் 3, 14, 17, 26, 30 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கும், சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Special flights to Malaysia, Abu Dhabi, Dubai from Trichy airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X