கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பிய 4 பேரின் வீடுகள் இருக்கும் பகுதிக்கு சீல்.. திருச்சி ஆட்சியர்
திருச்சி: சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்றி, சொந்த ஊருக்குத் திரும்பிய 4 பேரது வீடுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புள்ளம்பாடி ஒன்றியம், ஒரத்தூா் காலனித் தெருவைச் சோ்ந்த 25 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் 4 போ், சென்னை கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டில் சில ஆண்டுகளாக கூலித் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்த இவா்கள் 4 பேரும், கடந்த 15 நாள்களுக்கு முன்பு வேலைக்காக மீண்டும் கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டுக்கு சென்றனா்.
இந்நிலையில் தற்போது சென்னையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், லாரி மூலம் 4 பேரும் வியாழக்கிழமை சொந்த ஊா் வந்தனா்.
இதையடுத்து 4 பேருக்கும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரத்தூரில் தங்களது வீடுகளில் நால்வரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் ஒரத்தூா் கிராமத்தில் நேற்று மாலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தனிமையிலுள்ள இளைஞா்களிடம் முட்டை, பழங்கள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளுமாறும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
மேலும், இளைஞா்களது வீடுகள் கொண்ட பகுதியைத் தடை செய்த பகுதியாக அறிவித்த ஆட்சியா், அப்பகுதிக்குள் வேறு யாரும் வந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வின் போது லால்குடி வட்டாட்சியா் ச. சண்முகசுந்தரி, புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் மாதவன், கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications