முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு கன்னட அமைப்பு இழிசெயல்- அதே பாணியில் திருச்சியில் அய்யாகண்ணு கோஷ்டி!
திருச்சி: காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை கன்னட அமைப்பினர் இழிசெயலில் ஈடுபட்ட அதே பாணியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப்படத்தை வைத்து திருச்சியில் விவசாயிகள் பதில் கொடுத்தனர்.
காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்கிற காவிரி மேலாண்மைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கவே கூடாது என்கிறது கன்னட அமைப்புகள். இதற்காக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய இடங்களிலும் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடிக்கின்றன. கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் பந்த் போராட்டத்தை கர்நாடகா அரசு தடுக்காது; பந்த் போராட்டம் நடத்தலாம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். பெங்களூரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலையிட்டு திதி கொடுக்கும் இழி செயலை செய்தனர். பின்னர் பெண்கள், முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் முன்பு ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு பதில் தரும் வகையில் தமிழ்நாட்டில் திருச்சியில் விவசாயிகள் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப் படத்துக்கு அதே போல பொட்டு வைத்து மாலையிட்டு திதி கொடுத்து ஒப்பாரி வைத்தனர். திருச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 55 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று எலிகளை வாயில் கடித்து நீர் பற்றாக்குறையை வெளிப்படுத்தும் வகையில் அய்யாகண்ணு கோஷ்டியினர் போராட்டம் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#WATCH | Tamil Nadu: Farmers in Trichy staged a protest, demanding the release of Cauvery water from Karnataka. pic.twitter.com/IDHL0H8ktq
— ANI (@ANI) September 26, 2023
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications