கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பில்லை! உள்ளே வந்தது யார் என விசாரிங்க! வேல்முருகன் காட்டம்
திருச்சி : கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேலுமுருகன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
வேல்முருகன் கலந்து கொண்டு கட்சியில் இணையும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வருத்தத்தக்கது. இறந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், கல்வி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மெத்தன போக்கு இதற்கு காரணம். இதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு வரும் காலங்களில் மேற்கண்ட செயல் எங்கும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலைக்கு வாய்ப்பில்லை
மேற்கண்ட பள்ளியில் படித்து இறந்து போன என்ற மாணவி நன்றாக படிக்கக் கூடியவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவர். அப்படி இருக்கும் பொழுது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. அந்தப் பள்ளியில் சந்தேகப்படும்படியாக யார் யார் உள்ளே வந்தார்கள் யாருடைய அரசியல் தொடர்பு அவர்களுக்கு இருந்தது வெளியில் இருந்து ஏதேனும் நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்தார்களா, இவை எல்லாவற்றையும் காவல்துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அடக்க நினைக்கக் கூடாது
மேற்கண்ட வன்முறை சம்பவத்தை நானும் கண்டிக்கிறேன். ஆனால் தற்பொழுது எடுக்கும் நடவடிக்கையில் இனிமேல் எந்த ஒரு பிரச்சனையிலும் பொது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் போராடினால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி அடக்க நினைக்கக் கூடாது. மேற்கண்ட சம்பவத்தில் 17 பிரிவுகளின் மேல் வழக்கு செய்து இருப்பது நல்லது அல்ல.வன்முறை செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கலாம் பொதுமக்கள் இதில் பாதிக்கக் கூடாது என்பது எனது கருத்து
Recommended Video

தமிழக அரசிற்கே சவால்
தனியார் பள்ளி சங்கங்களைச் சேர்ந்த தலைவர் தமிழக அரசிற்கே சவால் விடுகிறார். ஒருநாள் பள்ளிகள் இயங்காது என்கிறார். எத்தனை பள்ளிகள் அன்று இயங்கவில்லையோ அத்தனை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மிகுந்த வருத்தத்தக்க விஷயம். இதற்கு காரணம் யார் பின்பலம் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இருந்தால்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும் எனவே ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசு அதை பெறுவதற்கான நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளை உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை தான் உள்ளது" என்றார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications