தமிழகத்தில் இன்னும் எதற்கு இ-பாஸ்...? காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கேள்வி
திருச்சி: மத்திய அரசே இ-பாஸ் முறை தேவையில்லை எனக் கூறிய பிறகும் தமிழகத்தில் இ-பாஸ் முறையை நீட்டித்து வருவது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான திருநாவுக்கரசர் வினவியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஊரடங்கு
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு தடை விதித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தற்போது அமலில் உள்ள இ-பாஸ் முறை மேலும் சிரமத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதையறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

திட்டவட்டம்
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் இ-பாஸ் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறையால் மக்கள் படும் சிரமங்கள் ஏராளம் என்றும் இனியும் இ-பாஸ் முறையை ஏற்க முடியாது எனவும் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு
இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்த பின்னரும், தமிழக அரசு அதனை கைவிட மறுப்பதற்கான காரணம் புரியவில்லை என்றும் இ-பாஸ் மக்களை மன அழுத்தத்திற்கு தள்ளுவதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். உறவினர்கள், நண்பர்களின் இறுதிகாரியங்களுக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்ல அறிவிப்பு
மேலும், கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் வெளியே வரவே தயங்கும் சூழலில் இ-பாஸ் நடைமுறை தேவையற்றது என மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் இது குறித்து பரிசீலித்து விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications