திருச்சி: மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் மீது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச்செயலாளராக பதவியில் இருப்பவர் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications