யோசிக்காதீங்க.. எனது காரில் ஏற்றுங்க.. ஹாஸ்பிடல் போகலாம்.. திருச்சி கலெக்டர் பிரதீப்பின் மனிதநேயம்!
திருச்சி: விபத்தில் காயமடைந்த தலைமை ஆசிரியை ஒருவரை தனது காரில் மீட்டுச் சென்று உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தையோ அல்லது ஆம்புலன்ஸையோ வரவழைத்து விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.
ஆனால் அது வரை தாமதிக்க வேண்டாம் என்ற மனிதநேய சிந்தனையோடு தனது இன்னோவா காரிலேயே விபத்தில் சிக்கியவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றிருந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அங்கிருந்து திரும்பும் வழியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தை கண்டிருக்கிறார். இதையடுத்து உடனடியாக தனது காரை நிறுத்தி இறங்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதுடன் உடனடியாக தனது காரிலேயே அவரை ஏற்றிக்கொண்டு சென்று மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

யோசிக்காமல் உதவி
இதையடுத்து உரிய நேரத்தில் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையால் அந்தப் பெண் அபாய கட்டத்திலிருந்து மீண்டார். கலெக்டர் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தை வரவழைத்தோ அல்லது ஆம்புலன்ஸை கூப்பிடுங்கப்பா எனக் கூறிவிட்டோ சென்றிருக்கலாம். ஆனால் அது போல் செய்யாமல் தனது காரிலேயே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச் சென்றது தான் இங்கு குறிப்பிடத்தக்கது. இருக்கையில் ரத்தமாகும், கழுவ வேண்டுமே என எதைப் பற்றியும் யோசிக்காமல் விலைமதிப்பற்ற மனித உயிர் ஒன்றை அவர் காப்பாற்றியுள்ளார்.

யார் அந்த பெண்?
இதனிடையே கலெக்டரால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதும் அவர் திருவெள்ளறை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. வழக்கம் போல் பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

கலெக்டருக்கு பாராட்டு
இதனிடையே உயிரை காப்பாற்றிய உன்னத சேவைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications