யோசிக்காதீங்க.. எனது காரில் ஏற்றுங்க.. ஹாஸ்பிடல் போகலாம்.. திருச்சி கலெக்டர் பிரதீப்பின் மனிதநேயம்!
திருச்சி: விபத்தில் காயமடைந்த தலைமை ஆசிரியை ஒருவரை தனது காரில் மீட்டுச் சென்று உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தையோ அல்லது ஆம்புலன்ஸையோ வரவழைத்து விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.
ஆனால் அது வரை தாமதிக்க வேண்டாம் என்ற மனிதநேய சிந்தனையோடு தனது இன்னோவா காரிலேயே விபத்தில் சிக்கியவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றிருந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அங்கிருந்து திரும்பும் வழியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தை கண்டிருக்கிறார். இதையடுத்து உடனடியாக தனது காரை நிறுத்தி இறங்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதுடன் உடனடியாக தனது காரிலேயே அவரை ஏற்றிக்கொண்டு சென்று மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

யோசிக்காமல் உதவி
இதையடுத்து உரிய நேரத்தில் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையால் அந்தப் பெண் அபாய கட்டத்திலிருந்து மீண்டார். கலெக்டர் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தை வரவழைத்தோ அல்லது ஆம்புலன்ஸை கூப்பிடுங்கப்பா எனக் கூறிவிட்டோ சென்றிருக்கலாம். ஆனால் அது போல் செய்யாமல் தனது காரிலேயே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச் சென்றது தான் இங்கு குறிப்பிடத்தக்கது. இருக்கையில் ரத்தமாகும், கழுவ வேண்டுமே என எதைப் பற்றியும் யோசிக்காமல் விலைமதிப்பற்ற மனித உயிர் ஒன்றை அவர் காப்பாற்றியுள்ளார்.

யார் அந்த பெண்?
இதனிடையே கலெக்டரால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதும் அவர் திருவெள்ளறை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. வழக்கம் போல் பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

கலெக்டருக்கு பாராட்டு
இதனிடையே உயிரை காப்பாற்றிய உன்னத சேவைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications