செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
திருச்சி: ஊரடங்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்து திருச்சி என்ஜினீயரிங் மாணவி விஸ்வாதிகா அசத்தி வருகிறார். ஆங்கிலப் புலமை மற்றும் கம்ப்யூட்டர் திறமையை பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரது ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து வருகிறார்கள்.
கொரோனா வைரசின் இரண்டாவது அலை உலகின் பல்வேறு நாடுகளின் அன்றாட வாழ்வியல் முறையையே புரட்டி போட்டுள்ளது. கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்குதலில் இருந்து அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா என உலகில் பல்வேறு நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது ஒருபுறம் எனில், மற்றொருபுறம் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட பல நாடுகளில் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே கல்வி கற்றுத் தரப்பட்டு வருகிறது.

அசத்தும் மாணவி
இந்தநிலையில் திருச்சி உறையூரைச் சேர்ந்த விஸ்வாதிகா (வயது 20) என்ற மாணவி பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வரும் இவர், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தனது உறவினரின் மகளுக்கு ஆன்லைன் மூலம் வேதியியல், இயற்பியல் பாடங்களை நடத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இணையதளத்தில் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவிட்டார்.

சிங்கப்பூர் மாணவர்கள்
இதையடுத்து லண்டனை சேர்ந்த ஆலியா என்ற 4-ம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டர் புரோகிராம் கற்பதற்காக விஸ்வாதிகாவின் வகுப்பில் சேர்ந்தார். இவருடைய ஆங்கிலப் புலமை மற்றும் கம்ப்யூட்டர் திறமையை பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரிடம் கல்வி கற்று வருகிறார்கள். தற்போது இவர் இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 20 மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகிறார். இதன்மூலம் பல டாலர்களை சத்தமில்லாமல் சம்பாதித்து வருகிறார்.

ஆன்லை கற்பித்தல்
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வரும் நிலையில், இவரின் சாமர்த்தியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இவருக்கு இருக்கும் திறமையை ஆன்லைன் கற்பித்தல் கருவிகள் மூலம் எளிய முறையில் வகுப்புகள் எடுத்து மாணவர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மேலும் பலரும் விஸ்வாதிகாவிடம் கல்வி கற்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆன்லைன் கல்வி இதுபற்றி விஸ்வாதிகா கூறுகையில், சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் குறுகிய கால ஆங்கில பயிற்சி படித்து முடித்தேன். இது சர்வதேச மாணவர்களை தொடர்பு கொள்ள உதவிகரமாக இருந்தது.

மாலையில் பாடம்
பகலில் எனது கல்லூரி பாடங்களை ஆன்லைனில் கற்கிறேன். மாலை நேரங்களில் வெளிநாட்டில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துகிறேன். பலர், என்னிடம் ஆர்வமாக கல்வி பயில்கிறார்கள். சிறந்த ஆசிரியையாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இதன்மூலம் நிறைவேறியுள்ளது" என்று அவர் கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications