பெண் எஸ்ஐ வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை.. டிஸ்மிஸ் செய்த கமிஷனர்.. திருச்சியில் அதிரடி
திருச்சி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்
திருச்சி: பெண் எஸ்ஐ புவனேஸ்வரி வீட்டில், கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை? வீட்டிலேயே ஒரு கஞ்சா வியாபாரியை பதுக்கி வைத்திருந்ததால்தான், பெண் போலீஸ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.. இந்நிலையில் புவனேஸ்வரியை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்
திருச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புவனேஸ்வரி. 37 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது, ஆனால் கணவரை பிரிந்து வாழ்கிறார்.

3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இவர் திருச்சி பீமநகரில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி இருந்தார். கடந்த வருடம் ஜூலை மாதம் இவருடைய வீட்டில் கஞ்சா வியாபாரி ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனால் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதன்படியே ஒருவர் பதுங்கி இருந்தார்.. அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தம்பி ஏற்கனவே கஞ்சா வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.. சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் இருந்து திருச்சி மாநகரத்துக்கு இடமாற்றம் செய்து இவர் உத்தரவிட்டார். இதனிடையே, மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்தே உத்தரவிட்டு விட்டார். மேலும் தங்கி இருக்கும் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் காலி செய்ய புவனேஸ்வரிக்கு அறிவுறுத்தப்பட்டது..
ஆனாலும் புவனேஸ்வரி தொடர்பான விசாரணை நடந்தபடியேதான் இருந்தது.. அந்த கஞ்சா வியாபாரி ஆந்திராவை சேர்ந்தவராம்.. கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார் புவனேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல, இதுவரை புவனேஸ்வரி தரப்பில் இருந்து போதிய விளக்கமும் எந்த குற்றச்சாட்டுக்கும் அளிக்கப்படவுமில்லை.. இதையடுத்து, அவரை, 'டிஸ்மிஸ்' செய்து, திருச்சி கமிஷனர் வரதராஜு உத்தரவிட்டுள்ளார். புவனேஸ்வரியை டிஸ்மிஸ் செய்தது போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications