வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி சிங்கப்பூர் இடையே மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி: வந்தே பாரத் திட்டத்தின் மூலம் திருச்சி-சிங்கப்பூா் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9,12,14 ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனோ வைரஸ் பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக தாயகம் வரமுடியாமல் சிக்கியிருந்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
மூன்று கட்டங்களாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது 4 ஆம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு சேவை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து 4 ஆவது கட்டமாக, ஜூலை 3 ஆம் தேதி ஒரு விமானம் இயக்கப்பட்ட நிலையில் 9, 12, 14 ஆகிய தேதிகளிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் முற்பகல் 11 மணிக்கும், 12 ஆம் தேதி காலை 9 மணிக்கும், திருச்சியிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல 9ஆம் தேதி மாலை 5.40க்கும், 12, 14 ஆம் தேதிகளில் இரவு 8.50க்கும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் திருச்சி வந்து சோ்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications