எந்த கொம்பனாலும் நம் ஆட்சியை குறை சொல்ல முடியாது! ஸ்டாலின் கூறிய ஒற்றை வார்த்தை! குவிந்த கைத்தட்டு
திருச்சி: ‛‛சில வீடுகளில் நமக்கு வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நாம் விட்டுவிடக்கூடாது. மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையுடன் அணுக வேண்டும். ஏனென்றால் எந்த கொம்பனும் குறை செல்ல முடியாத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பேசியபோது கைத்தட்டு குவிந்தது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் பணியை அனைவரும் ஆர்வமாக மேற்கொள்ள வேண்டும். நமது சாதனைகளை மக்களுக்கு தொடர்ந்து எடுத்து கூற வேண்டும். அரசு திட்டங்கள் பற்றி மிகத்தெளிவாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். யாருக்கு என்ன தேவையோ அதனை பெற்று கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இதனை செய்துதர ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர்களை அணுகுங்கள்.
வாக்குச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நான் பல முறை சொல்லி இருக்கிறேன். இனி திரும்ப திரும்ப நினைவுப்படுத்த உள்ளேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளிக்கிறேன்.
மேலும் தினமும் ஒருமணிநேரம் வாக்குச்சாவடி பணிகளுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வந்து விடலாம். சில வீடுகளில் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். சில வீடுகளில் பட்டும்படாமலும் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நாம் விட்டுவிடக்கூடாது.
மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையுடன் அணுக வேண்டும். என்னை பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். எந்த கொம்பனும் குறை செல்ல முடியாத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.(இந்த வேளையில் கட்சியினர் உற்சாகமாக கைத்தட்டி விசிலடித்தனர்) எங்களுக்குள் குறைகள் இருக்கலாம். பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியில் எந்த குறையையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையிலான திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நம் மீதும் ஆட்சி மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான மனுக்கள் எனக்கு வரும். இப்போது குறைந்துள்ளது. இதுவே எனக்கு பெருமை என நினைக்கிறேன்'' என்றார்.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications