Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை பற்றி ஆபாச படம்.. பேஸ்புக்கில் போட்ட மனைவி.. அதிர்ந்து போன போலீஸ்.. திருச்சியில் ஷாக்!

கணவனின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மனைவி கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஒரு பெண் ஆபாச படங்களை அப்லோடு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறது... அதுவும் தாலி கட்டிய கணவரின் போட்டோவுடன் இன்னொரு பெண்ணின் ஆபாச போட்டோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.. அந்த பெண் ஒரு காலேஜ் புரபசர் என்பது கூடுதல் ஷாக்!

திருச்சியை சேர்ந்தவர் மோகன் ஜெய்கணேஷ்... அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தாட்சாயிணி.. இவரும் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 3 வருஷமாகிறது.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. இருந்தாலும் 2 பேரும் போன் போட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். மோகனுக்கு ஃபேஸ்புக்கில் தன்னை பற்றின பதிவுகளை எழுதுவது வழக்கம்.

சம்பவங்கள்

சம்பவங்கள்

தன் வாழக்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் உடனே ஃபேஸ்புக்கில் பதிவிடுவார்.. அந்த வகையில், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் பதிவு செய்து வந்திருக்கிறார்... அப்படி ஒரு பதிவில், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையை பதிவிட்டார்.. அத்துடன், தங்கள் திருமண நாள் அன்று எடுத்த போட்டோவையும் மோகன் பதிவிட்டார்.

தாட்சாயிணி

தாட்சாயிணி

இதை பார்த்ததும் தாட்சாயிணிக்கு கோபம் வந்துவிட்டது.. உடனே வழக்கம்போல போனை போட்டு, சண்டையும் பிடித்தார்.. அந்த போட்டோக்களை எல்லாம் டெலிட் செய்யுமாறு சொன்னார்.. அதற்கு மோகனோ, "இந்த நிமிஷம்வரை நீதான் என் மனைவி.. அதனாலதான் போட்டோ போட்டேன்" என்றார். இதை கேட்டும் இன்னும் ஆவேசமானார் தாட்சாயிணி.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

கணவரை பழிவாங்கவும் முடிவு செய்தார்.. இதற்காக தன் காலேஜில் வேலை பார்க்கும் 28 வயதான கிருபாகரன் என்பவரிடம் உதவி கேட்டார்... பிறகு தாட்சாயிணியும் கிருபாகரனும் சேர்ந்து மோகனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்தனர். கணவரின் பாஸ்வேர்டு தாட்சாயினிக்கு தெரியும் என்பதால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தார். சில பெண்களின் ஆபாச படங்களை பதிவிட்டார்.

மார்பிங்

மார்பிங்

மேலும் சில பெண்களின் படங்களை எடுத்து மிக மிக அருவருப்பான வகையில் மார்பிங் செய்து அதையும் பதிவிட்டார்.. இதைப்பார்த்து ஷாக் ஆன மோகன், உடனடியாக பாலக்கரை போலீசில் புகார் தந்தார்.. விசாரணையில் தாட்சாயினியும், கிருபாகரனும் செய்த சதித்திட்டம் அம்பலமானது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இதையடுத்து, மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்... கிருபாகரனையும் கைது செய்து விட்டார்.. ஆனால், தாட்சாயினியை காணோம்.. அவரை தான் தேடி வருகிறார்கள்.. வழக்கமாக பெண்களின் ஆபாச படங்களைதான் இப்படி பதிவிட்டு மிரட்டுவார்கள்.. ஆனால், ஒரு பெண்ணே ஆபாச படங்களை அப்லோடு செய்தது கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+