இந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

ஒட்டப்பிடாரம்: இந்தியாவை இத்தாலிக்காரர்களிடம் திமுக ஒப்படைக்க பார்க்கிறது என நடிகை விந்தியா கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் 3 நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்வைத்துள்ளன.

Actress Vindhya says that DMK wants to handover India to Italy

ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா பேசினார். அப்போது தாளமுத்து நகரில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது விந்தியா பேசுகையில் ஒட்டப்பிடாரம் தொகுதி வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதியார் வரை வீரர்களை தந்த பூமியாகும். இங்கு அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும்.

ஊழல்வாதிகள் வெற்றி பெறவே கூடாது. திமுக நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும்.

ஊழல்களின் மொத்த உருவம் அதிமுக. உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டிடிவி தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம் ஆகும். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சியே வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் விந்தியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+