135 பவுன் தங்க நகை.. தனியாரில் மறு அடகு வைத்த தூத்துக்குடி பெண்.. மொத்தமாக போச்சு
தூத்துக்குடி: அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைப்பது என்பது நமது ஊர்களில் தற்போது அதிகமாக நடக்கிறது. சிலருக்கு வங்கிகளில் தரும் பணத்தைவிட கூடுதல் பணம் தேவைப்படும்.. அப்படிப்பட்ட சூழலில் தனியார் அடகு கடைகளில் போய் அடகு வைக்கிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெயராணி என்பவர், வீடு வாங்குவதற்காக தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்து இருந்தாா். அவருக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. அதற்காக தனியாரில் மறு அடகு வைத்த நிலையில், அந்த நகையை மோசடி செய்துள்ளாராம் தனியார் நிதி நிறுவன பெண் உரிமையாளர்.. நடந்தது பற்றி பார்ப்போம்.
அடகு வைத்த நகையை மறு அடகு வைத்தால் அதிக பணம் தருவதாக சில தனியார் நிதி நிறுவனங்கள் ஆசை வார்த்தை காட்டுகின்றன. இதனால் அந்த வலையில் சிக்கும் சிலர் அடிமாட்டு விலைக்கு தங்க நகைகளை பறிகொடுக்கிறார்கள். சில அதிக பணம் வேண்டுமே என்று நம்பகத்தன்மை இல்லாத இடங்களில் அடகு வைத்து நகைகளை பறிகொடுத்து ஏமாறுகிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜியோ என்பவர் கப்பலில் ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மனைவி ஜெயராணி என்ற ஜெயா என்பவருக்கு 34 வயது ஆகிறது. ஜெயராணி, வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடமானம் வைத்து இருந்தாா். இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு அவருக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டது.
இதை அறிந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த மெசிங்டன் மனைவி ஜீவா ஹெர்மனா, சங்கரவேல் மகன் மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஜெயராணியிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் தொகைக்கு மறுஅடமானம் வைத்து தருவதாக கூறியிருக்கிறார்களாம்.
இதையடுத்து ஜெயராணி, வங்கியில் இருந்த 135 பவுன் தங்க நகைகளை மீட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.53 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மறு அடமானம் வைத்ததாக சொல்லப்படுகிறது. சில மாதங்கள் கடந்த பின்னர் ஜெயராணி தனது நகைகளை திருப்புவதற்காக மொத்தம் ரூ.43 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்தாராம்.
ஆனால் மொத்த பணத்தையும் வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை மீட்க முடியும் என்று தெரிவித்தார்களாம். இதனால் மீதி பணத்தையும் தயார் செய்த பிறகு நகையை ஜெயராணி கேட்டிருக்கிறார். ஆனால் ஜீவா ஹெர்மனா, மகேசுவரன் ஆகியோர் நகையை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராணி அடகு வைத்த தனது நகைகளை மீட்டு தரக்கோரி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக ஜீவா ஹெர்மனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேசுவரனை தேடி வருகிறார்கள். 135 பவுன் தங்க நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மூட்டை மூட்டையாக.. தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா? ஷாக் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications