முதல் முறையாக திருச்செந்தூரில் சம்பவம் செய்த "சிலுக்கு".. தூத்துக்குடியை ஈர்த்த 3 திருநங்கைகள்.. அட
தூத்துக்குடி: திருச்செந்தூரில் நடந்த நிகழ்வு ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
திருச்செந்தூரில் திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழா நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட திருநங்கைகள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருநங்கைகள்: கடவுளின் படைப்பில் சிறப்பம்சமாக கருதப்படும் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.. ஒருகாலத்தில் வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அனைத்திலுமே சாதித்து வருவதுடன், இந்த சமூகத்தை தவறான பார்வையில் இருந்தும் நீக்கி தங்கள் மீது கவனத்தை திருப்பி வருகிறார்கள்.
மதநம்பிக்கை உடையவர்கள், திருநங்கைகளாக மாறியபிறகு பல்வேறு விரதங்களையும் மேற்கொள்கிறார்கள்.. அதாவது, ஆணாக பிறந்து வளர்ந்து முழுமையாக பெண்ணாக மாறுவதற்காக, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகள் 40 நாட்கள் விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா என்ற சடங்கு நடத்தப்படுகிறது.
புதிய சடங்கு: அந்தவகையில், திருச்செந்தூரை சேர்ந்த கற்பகம், ஷிவானி, சிலுக்கு ஆகியோர், புதிதாக திருநங்கைகளாக மாறியிருக்கிறார்கள்.. இவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா, திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருநங்கையர் நலச்சங்க தலைவர் சியாமளா தலைமை தாங்கினார்... போத்திராஜ் மாதா என்று அழைக்கப்படும் சந்தோஷி மாதாவுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதிதாக திருநங்கைகளாக மாறிய 3 பேருக்கும் சடங்குகள் நடத்தப்பட்டன.. அப்போது 3 பேருமே, கல்யாண பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.. சடங்குகள் முடிந்த நிலையில், விழாவில் பங்கேற்ற மூத்த திருநங்கைகளிடம் 3 பேரும் ஆசி பெற்றார்கள்..
கொண்டாட்டம்: முதல்முறையாக பால் ஊற்றும் இந்த சடங்கானது வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.. இதற்காக மண்டபத்துக்கு வெளியே பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. மொய் எழுதிய திருநங்கைகள் இந்த நிகழ்வில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்..
தமிழகம் மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இவ்விழாவில் பங்கேற்றனர். திருச்செந்தூரில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழாவானது, சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. முன்னதாக, புதிதாக திருநங்கைகளாக மாறிய ஜமாத் முஸ்லிம் முறைப்படி சடங்கு நடைபெற்றது
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications