Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னாதி மன்னர்கள் ஆண்ட மண்! ஆதிச்சநல்லூரில் கிடைத்த "தங்க கிரீடம்".. சிலிர்க்க வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் அருகே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பகுதியில் தற்போது தங்கத்தால் ஆன கிரீடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் தங்கத்தால் ஆன ஆபரணங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் அகழ்வாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் இதுவரை 70க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொன்மையான நாகரிகம்

தொன்மையான நாகரிகம்

உலகின் மிக தொன்மையான நாகரிகமாக சீனாவின் மஞ்சள் நதி நாகரிகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகள் மட்டுமே இருந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்க பெற்ற பொருட்கள் மேற்குறிப்பிட்ட தொன்மையான நாகரிகங்கள் பட்டியலில் தமிழர் நாகரிகம்தான் முதன்மையானது என உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் பகுதியையொட்டியுள்ள ஆதிச்சநல்லூர் எனும் பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள்

இந்த பகுதியில் 1876ல் அகழாய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, 2004ம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நீதிமன்றம் அறிவித்தது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேபோல சங்க காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாணயங்கள்

நாணயங்கள்

இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியிலிருந்து இரண்டு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகளின் உருவம், மரம், யானை, மீனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "இந்த நாணயங்கள், ஆதிச்சநல்லூரில் சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது" என மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் முனைவர் அருண்ராஜ் கூறியிருந்தார்.

தங்க கிரீடம்

தங்க கிரீடம்

இதனையடுத்து தற்போது தங்க கிரீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொருநை நதி ஓரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் மக்கள் செழிப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. தங்க கிரீடத்தையடுத்து ஆதிச்சநல்லூர் சி சைட் எனப்படும் அலெக்சாண்டர் ரியாவில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் 30 செ.மீட்டர் ஆழத்தில் நடந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பட்டயம், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கிய பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+