அப்பா குருபூஜைக்கு ஆரவாரமாக வாங்க! யாரும் குடிச்சுட்டு வராதீங்க! பசுபதி பாண்டியன் மகள் கறார்!
தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் நினைவு தினமான ஜனவரி 10ஆம் தேதி அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர் குடித்து விட்டு வரக்கூடாது என சந்தன பிரியா பசுபதி பாண்டியன் கறார் கண்டிஷன் போட்டுள்ளார்.
தனது தந்தை பசுபதி பாண்டியன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் ஆரவாரமாக வரலாம் ஆனால் அதே வேளையில் யாரும் தயவு செய்து மது அருந்திவிட்டு வர வேண்டாம் என்றும் 10 பேர் அஞ்சலி செலுத்த வந்தால் கூட பரவாயில்லை மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை போட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் அமைப்பினருக்கு பசுபதி பாண்டியன் மகன் சந்தன ப்ரியா விதித்துள்ள இந்த நிபந்தனை சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

பெருமைக்காக கூட்டம் வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாரும் குடித்து விட்டு வரக் கூடாது என அவர் பேசியிருப்பது மது எதிர்ப்பு போராளிகள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. பசுபதி பாண்டியனை பொறுத்தவரை திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத் தட்டு கிராமத்தில் தான் அவரது நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு ஆண்டு தோறும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சந்தன பிரியா தலைமையில் பசுபதி பாண்டியன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் தந்தை நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் சந்தன ப்ரியா, மதுவுக்கு எதிராக பேசி தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் குடிக்கக் கூடாது என அட்வைஸ் அளித்து வருகிறார்.
ஜனவரி 10, 2024 அன்று பசுபதி பாண்டியனின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தலைமையில் 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications