Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி/ கொழும்பு: வளைகுடாவில் நிலவும் நிச்சயமற்ற நிலை. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது போன்ற சூழல்களுக்கு மத்தியில் இலங்கைக்கு 38 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த கப்பல் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்​கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளனர். இந்த போர் காரண​மாக உலகம் முழுவதும் கேஸ், பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. குறிப்​பாக இந்தியா, ஜப்பான், தென்கொரியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்பட பல்வேறு ஆசிய நாடு​கள் எரிபொருள் பற்​றாக்​குறை​யால் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளன.

Sri Lanka President Dissanayake expresses gratitude to India for the fuel supply

இந்​தி​யா​வில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. ஓரளவு சேமிப்பு உள்ளது. எனினும் கேஸ் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக சிலிண்டர் கிடைப்பது சவாலாக உள்ளதால், வீட்டு சிலிண்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபுறம் வீட்டு சிலிண்டர் 50 நாட்களுக்கு மேல் மக்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு. எனினும் அண்டை நாடான இலங்​கை​யில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு மிக​வும் மோச​மான நிலை ஏற்பட்டுள்ளது.

2002ல் இருந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்​டுப்​பாட்டை சமாளிக்க அந்த நாட்​டில் புதன்கிழமை பொது விடு​முறை அறிவிக்​கப்​பட்டிருக்கிறது. ஒரு நான்கு சக்கர வாக​னத்​துக்கு ஒரு வாரத்​துக்கு 15 லிட்​டர் பெட்ரோல், இரு சக்கர வாக​னத்​துக்கு ஒரு வாரத்​துக்கு 5 லிட்​டர் பெட்​ரோல் மட்​டுமே விநி​யோகம் செய்​யும் நிலை இருக்கிறது.. பெட்​ரோல், டீசல் விலை​யும் கணிச​மாக உயர்த்​தப்​பட்டு உள்​ளது.

ஈரான் அமெரிக்கா போர் காரண​மாக இலங்கையில் நிலக்​கரி இறக்​குமதி பாதிக்​கப்​பட்டுள்ளது. இதனால் இலங்கையின் அனல் மின் நிலை​யங்​கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்​கல் ஏற்​பட்​டிருக்​கிறது. இதனால் நாள்​தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமலாகி உள்ளது. இந்த சூழலில் இலங்​கைக்கு நட்பு ரீதியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்​தியா வழங்கி உள்​ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிபர் அனுர குமார திசா​நாயக்க சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறுகையில்," அண்மையில் முன்பு இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் தொலைபேசி​யில் பேசினேன். அப்​போது இலங்​கை​யில் நில​வும் எரிபொருள் தட்​டுப்​பாடு குறித்து அவரிடம் எடுத்​துரைத்​தேன். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்​கிழமை இலங்​கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்​தியா வழங்​கி உள்ளது. இந்​தி​யா​வின் விரை​வான உதவிக்கு நன்​றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் எங்களோடு ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வரு​கிறார். அவருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்" இவ்​வாறு அதிபர் அனுர குமார திசா​நாயக்க தெரிவித்துள்ளார்.

Election 2026

இலங்கையில் பெட்ரோல் விலை 398 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 120 ரூபாய் ஆகும. டீசல் விலை 382 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 115 ரூபாய் ஆக உள்ளது. கடந்த மார்ச்21ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து செல்லும் சிறிய மற்றும் நடுத்தர ரகக் கப்பல்கள் கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுகங்களுக்குத் தொடர்ச்சியாக எரிபொருளைக் கொண்டு சென்று வருகின்றன. இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயலும் சூழலில், இந்தியா இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளை (பெட்ரோல், டீசல், உணவு) உடனுக்குடன் பூர்த்தி செய்வதன் மூலம் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+