இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்
தூத்துக்குடி/ கொழும்பு: வளைகுடாவில் நிலவும் நிச்சயமற்ற நிலை. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது போன்ற சூழல்களுக்கு மத்தியில் இலங்கைக்கு 38 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த கப்பல் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளனர். இந்த போர் காரணமாக உலகம் முழுவதும் கேஸ், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென்கொரியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்பட பல்வேறு ஆசிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. ஓரளவு சேமிப்பு உள்ளது. எனினும் கேஸ் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக சிலிண்டர் கிடைப்பது சவாலாக உள்ளதால், வீட்டு சிலிண்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபுறம் வீட்டு சிலிண்டர் 50 நாட்களுக்கு மேல் மக்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு. எனினும் அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
2002ல் இருந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்த நாட்டில் புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 15 லிட்டர் பெட்ரோல், இரு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே விநியோகம் செய்யும் நிலை இருக்கிறது.. பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஈரான் அமெரிக்கா போர் காரணமாக இலங்கையில் நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமலாகி உள்ளது. இந்த சூழலில் இலங்கைக்கு நட்பு ரீதியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கி உள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறுகையில்," அண்மையில் முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கி உள்ளது. இந்தியாவின் விரைவான உதவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
- நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!
- ’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
- கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?
- சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!
- வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க!
இலங்கையில் பெட்ரோல் விலை 398 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 120 ரூபாய் ஆகும. டீசல் விலை 382 இலங்கை ரூபாய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 115 ரூபாய் ஆக உள்ளது. கடந்த மார்ச்21ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து செல்லும் சிறிய மற்றும் நடுத்தர ரகக் கப்பல்கள் கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுகங்களுக்குத் தொடர்ச்சியாக எரிபொருளைக் கொண்டு சென்று வருகின்றன. இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயலும் சூழலில், இந்தியா இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளை (பெட்ரோல், டீசல், உணவு) உடனுக்குடன் பூர்த்தி செய்வதன் மூலம் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
-
2022 நிலைமைக்கு போகும் இலங்கை! எல்லாத்துக்கும் இந்த டிரம்ப்தான் காரணம்! மோசமாகும் நிலைமை! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி













Click it and Unblock the Notifications