Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் பீச்சில் பக்தர்களின் உடலை "பதம் பார்த்த" மர்மம்? தூத்துக்குடி அதிகாரிகள் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் மீண்டும் ஜெல்லி மீன்கள் தென்பட்டதால், பக்தர்கள் தரப்பில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுவது என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.. இப்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் முன்புறமுள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

tiruchendur thiruchendur jellyfish

திருச்செந்தூர்: தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருவதால், வழக்கத்தைவிட, கூடுதலாக பக்தர்களின் வருகை காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே, கடலில் புனித நீராடும்போது, அவர்களது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால், கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் இதுகுறித்து பக்தர்கள் முறையிட்டனர். அப்போதுதான் ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்குவது தெரியவந்துள்ளது.

மீண்டும் பாதிப்பு: கடந்த சனிக்கிழமையன்று, சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியிருந்தது. அதனை கடற்கரை பகுதியிலேயே பணியாளர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டு, சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் கொண்டுபோய் விட்டனர். எனினும் மறுநாள் மீண்டும் பக்தர்களின் உடலில் அரிப்பு தென்பட்டதால் திருச்செந்தூரில் பக்தர்களிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது.

கடந்த 2 நாட்களாக நீராடிய பக்தர்கள் மீது, ஜெல்லி மீன்கள் பட்டதில் உடலில் அரிப்பு ஏற்பட்டது. திருச்செந்தூரின் கடலோரத்தில் திடீரென கட்டுக்கடங்காமல் கரையொதுங்கிய ஜெல்லி மீன்களால் பயந்து போன பக்தர்கள்..

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் கடலோர போலீசார் மூலம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, களப்பணியாளர் பால் பாண்டி உள்ளிட்டோர் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் காணப்பட்ட ஜெல்லி மீன்களை ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.. அந்த மீன்கள், தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அழுவை சொறி: இதுகுறித்து கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானி ரஞ்சித் சொல்லும்போது, "திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் "அழுவைசொறி" வகையை சேர்ந்ததாகும். இதற்கு கடிக்கும் திறன் கிடையாது. ஆனால், கொட்டும் திறன் கொண்டவை..

பவளப்பாறைகள் போல இவை கடலில் வாழும் ஓர் உயிரினமாகும். சிறியது முதல் பெரிய அளவு வரை காணப்படும்.. ஆனால் வருடத்துக்கு 2 முறை மட்டுமே இந்தவகை ஜெல்லி மீன்கள் கடற்கரைக்கு வரும்.. குறிப்பாக, வெயில் காலம் முடிகிற நேரத்திலும், மழைக்காலம் துவங்கும் நேரததிலும் இந்த வகை மீன்கள் கரை ஒதுக்கும்.. உடலில் பட்டால் ஊறல் எடுக்கும்.. இதற்கு உடனடியாக முதலுதவி எடுத்து கொண்டாலே போதும்.. மற்றபடி இந்த வகை ஜெல்லி மீன்களால் எந்தவகையான பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

tiruchendur thiruchendur jellyfish

ஆபத்தானவை: ஜெல்லி மீன் என்று அழைக்கப்பட்டாலும், இவை மீன் வகையறா கிடையாது.. கடல் உயிரினங்களிலேயே அழகானதும் இந்த ஜெல்லி மீன்கள்தான்.. ஆட்பறிக்கக்கூடிய உயிரினமும் இந்த ஜெல்லி மீன்கள்தானாம். இதனை சிலர் சொறி மீன் என்றும் சொல்வார்கள்.

எனினும், இப்போது ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் தென்பட்டுவருவதால், இதன் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், ஜெல்லி வகை மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, கோவில் வளாகத்திலுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும், கடற்கரையில் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+