அரக்கோணத்தில் 4.5 உயரத்தில் பைபரால் ஆன திருவள்ளுவர் சிலை.. வரும் 20ம் தேதி திறக்க ஏற்பாடு
Recommended Video
அரக்கோணம்: வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் முதன் முறையாக நான்கரை அடி உயரம் கொண்ட பைபரில் ஆன அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தி டவுன் ஹால் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் அக்குழுவின் தலைவர் மருத்துவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அதில் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பது குறித்தும் மேலும் அன்றைய நாள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அக்குழுவின் தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 20 ம் தேதி அரக்கோணத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது.
முதன் முறையாக 4.5 அடி உயரத்தில் பைபர் கொண்டு இந்த திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்படுகிறது. பைபரில் அமைக்கப்படும் இந்த சிலை திறப்பு விழாவில், வி.ஜி.பி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டு சிலை திறக்கவுள்ளனர் என்றார்.