செத்துக் கொண்டிருந்த நாக நதி.. ஓடி வந்து உயிர் கொடுத்து மீட்ட 20,000 பெண்களின் ஈர மனசு!
Recommended Video
வேலூர்: வேலூரில் செத்துக்கொண்டிருந்த நாகநதியை 20 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து காப்பாற்றி உள்ளார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்கும் 3500 மீழ் கிணறுகளை கட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தை மற்ற நாட்டின் பகுதிகளிலும் செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சம் நிச்சயம் ஏற்படாது என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் 24 மாவட்டங்களில் ஒன்று தான் வேலூர். இங்கு எப்போதுமே வெயில் கொளுத்தும் இதனால் தண்ணீர் பஞ்சம் என்பது இங்கு பல ஆண்டுகளாக தீராத பிரச்ணையாக தொடர்ந்து வருகிறது.
இதனால் இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நாகநதி சீரமைப்பு திட்டம். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதிதான் திருவண்ணாமலை மற்றும் வேலூரின் ஜீவாதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தது.

நாகநதியை காக்க முயற்சி
ஆனால் இந்த நதி கடந்த 15 ஆண்டுகளாக மெல்ல மெல்ல செத்துவந்தது. இதையடுத்து வாழும் காலை தன்னார்வலர்கள் கடந்த 2014 செப்டம்பர் முதல் நாகநதியை காக்கும் முயற்சியில் இறங்கினர். இவர்களோடு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிந்த பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.

வாழும் கலை தொண்டர்கள்
நாகநதியை காக்க இந்த குழு செய்தது முக்கியமான விஷயம் மீழ் கிணறுகளை அமைத்ததுதான். பொதுவாக நீர் நிலைகளில் தடுப்பணைகளை கட்டினால் அவை சில நேரங்களில் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. மேலும் தேங்கும் தண்ணீர் ஆவியாவதுடன், நிலத்தடி நீரின் அளவும் குறைந்துவிடுகிறது. எனவே தடுப்பணைகள் அருகில் மீழ் நிரப்பு கிணறுகளை அமைப்பது தான் தீர்வு என முடிவு செய்த வாழும் காலை குழு தொண்டர்கள் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 20 ஆயிரம் பெண்கள் வேலூர் மாவட்டத்தில் இந்த பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள்.

210 செக் டேம்கள்
தற்போது வரை 350 மீழ் கிணறுகளும், 210 செக் டேம்களும் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிணறும் 20 அடி ஆழம் 15 நீளம், 6அடி அகலம் என்ற அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு கிணறு அமைக்க 23 நாட்களும் 10 வேலை ஆட்களும் தேவைப்படுகிறதாம். தற்போது வரை வேலூரின் கன்னியம்பாடி பகுதியில் நாகநதி கால்வாய்கள் புணரமைப்பு வேலை நடந்து வருகிறது. மீழ் கிணறுகள் அமைக்கப்பட்டதன் காரணமாக வேலூர் கன்னியம்பாடி பகுதி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் வற்றிகிடந்த கிணறுகள், புணரமைபுக்குபின் பெய்த மழையால் நிறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் பஞ்சம் வராது
இதேபோல் ஒவ்வொரு நதி செல்லும் பாதையை புணரமைத்து மீழ் கிணறுகளை அமைத்தால் நிச்சயம் தண்ணீர் சேமிக்க முடியும். அந்த பகுதி விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும். எனவே அருமையான இந்த திட்டம் தண்ணீர் பஞ்சம் மிகுந்த நம் தேசத்திற்கு மிக அவசியான ஒன்றாகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications