எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியம்! அப்பு செய்த காரியம்! காட்பாடியில் அரசியல் கலாட்டா!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்டத் தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி.கதிர் ஆனந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணியை நீங்கள் எப்படி திறந்து வைக்க முடியும் எனக் கேட்டு நூற்றுகணக்கான திமுகவினர் அங்கு குவிந்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதிமுகவினரும், திமுகவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.

காட்பாடி அப்பு
காட்பாடி அப்புவை தெரியாத அதிமுக காரர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அமைச்சர்துரைமுருகனை பலமுறை தண்ணீர் குடிக்க வைத்தவர். சொற்ப ஓட்டுக்களில் தான் தனது வெற்றியை துரைமுருகனிடம் பறிகொடுத்தார் இந்த அப்பு. அதுவும் தபால் ஓட்டுக்களால் தான் துரைமுருகன் ஒரு வழியாக கரையேறினார். இல்லையென்றால் இந்நேரம் நடந்திருப்பது வேறாக இருந்திருக்கும்.

எடப்பாடி பாராட்டு
துரைமுருகனுக்கே டஃப் கொடுக்கிறார் என்றால் அது யாராக இருக்கும் என அப்புவை பற்றி அதிமுககாரர்கள் அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமியுமே கூட அப்புவை அழைத்து அவரது களப்பணியை குறிப்பிட்டு பாராட்டினார். இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக உள்ள அப்பு, இப்போது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை எதிர்த்து வேலூரில் அரசியல் செய்து வருகிறார். திமுக பொதுச்செயலாளர் தரப்புடன் அப்பு இந்தளவு நேரடியாக மோதுகிறார் என்றால் அதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியமே காரணமாக கூறப்படுகிறது.

ரயில்வே மேம்பாலம்
காட்பாடியின் பிரதான இடங்களில் ஒன்றான ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்ட தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், நீ எப்படி எங்க எம்.பி. நிதியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை திறக்கலாம் என திமுகவினர் ரவுண்டு கட்டிவிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் அங்கு திரண்டதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் சமரசம் செய்து இரு தரப்பையும் கலைந்து செல்ல வைத்தனர்.

கதிர் ஆனந்த்
இதனிடையே சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்றுக் கூறிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாலியை கையில் வைத்துக்கொண்டு சுற்றியதை போல், காட்பாடியில் ஒருவர் எப்போதும் ரிப்பனை கையில் வைத்துக்கொண்டு சுற்றுவதாக சினிமா காட்சியை உதாரணமாக கூறி அப்புவை சூசகமாக தாக்கி விமர்சித்துள்ளார் கதிர் ஆனந்த்.
-
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications